Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கையேந்தி பவன் இட்லி குருமா - சிம்பிளா எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Kaiyenthi Bhavan Idli Kurma Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு எப்போதும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாக சைடு டிஷ் செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி சாப்பிட்டு போரடித்துவிட்டால், குருமாவை செய்து கொடுங்கள். அதுவும் கையேந்தி பவன் ஸ்டைல் இட்லி குருமாவை செய்யுங்கள். இந்த இட்லி குருமாவை செய்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குருமா செய்வற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு கையேந்தி பவன் இட்லி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கையேந்தி பவன் இட்லி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* பச்சை மிளகாய் - 6
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 4
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 சிறிய மூடி
* தண்ணீர் - சிறிது
குருமாவிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கறி மசாலா தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய 2 வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, நன்கு நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரி, பொட்டுக்கடலை, கசகசா மற்றும் சோம்பு சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, அதில் துருவிய தேங்காயை சேர்த்து,
வாணலியின் சூட்டில் வறுக்க வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்கள் குளிர்ந்த பின், மிக்சர் ஜாரில் போட்டு,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கல்பாசி, பிரியாணி இலை மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் கறி மசாலா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, வேக
வைத்துள்ள உருளைக்கிழங்கை ஒன்றிரண்டாக மசித்து சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கி, குருமாவிற்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குருமாவில் உள்ள பச்சை வாசனை போனதும், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே
சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான கையேந்தி பவன் இட்லி குருமா
தயார்.



Click it and Unblock the Notifications