Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் இட்லி மாவும், 1 கப் கடலைப்பருப்பும் இருந்தால் டக்குனு இந்த இனிப்பை செய்யுங்க..டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
Kadalai Paruppu Suzhiyam Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதாவது சாப்பிட வேண்டுமென்ற ஆசை வரும். அதிலும் பள்ளி முடித்து வரும் குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிச்சயம் ஏதாவது சாப்பிட கொடுக்க வேண்டும். அப்படி குழந்தைகளின் பசியை போக்கும் வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் 1 கப் கடலைப்பருப்பும், 1 கப் இட்லி மாவும் இருந்தால், இந்த சுவையான சுழியத்தை செய்து கொடுங்கள். முக்கியமாக இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு அட்டகாசமான சுவையில் இருக்கும். முக்கியமாக கடலைப்பருப்பை முன்கூட்டியே ஊறவைத்து விட்டால் போதும் சில நிமிடங்களிலேயே இந்த அட்டகாசமான இனிப்பை செய்து விடலாம்.

உங்களுக்கு இந்த கடலைப்பருப்பு சுழியத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை சுழியம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- புளிக்காத இட்லி மாவு - ஒரு கப்
- கடலைப் பருப்பு - ஒரு கப்
- தேங்காய்த் துருவல் - அரை கப்
- ஏலக்காய்ப் பொடி - அரை ஸ்பூன்
- சுக்குப்பொடி - அரை டீஸ்பூன்
- நெய் - ஒரு டீஸ்பூன்
- பொடித்த வெல்லம் - 200 கிராம்
- உப்பு - சிறிதளவு
செய்முறை:
- இந்த சுழியத்தை செய்வதற்கு முதலில் செய்ய வேண்டியது கடலைப்பருப்பை ஊற வைப்பதுதான்.
- கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு முக்கால் பதம் வேகும் வரை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு சூடாக்கி அதில் தேங்காய்த் துருவலை இரண்டு நிமிடங்கள் வதக்கி எடுக்கவும்.
- முக்கால் பதம் வேகவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் எதுவும் சேர்க்காமல் மிக்ஸியில் பொடித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, வறுத்த தேங்காய்த் துருவல், பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
- பின்னர் இந்த கலவையை உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
- இட்லி மாவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பின்னர் தயாரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டைகளை இட்லி மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் நன்கு சிவக்கும் படி பொரித்தெடுக்கவும்.
- டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரபலமான இந்த இனிப்பு செய்வதற்கு எளிமையாகவும், சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications