Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
1 கப் ரவை இருந்தா போதும்.. காலையில 10 நிமிஷத்துல சூப்பர் டிபன் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Rava Idli Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சுட மாவு எதுவும் இல்லையா? சப்பாத்தி, பூரி போடலாம் என்றால், அதற்கும் மாவு இல்லையா? ஆனால் வீட்டில் ரவை உள்ளதா? அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு 10 நிமிடத்தில் ஒரு சூப்பரான டிபன் செய்யலாம்.
இந்த டிபன் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இந்த இட்லி, வேர்கடலை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ரவா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* தயிர் - 1/4 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 கப் ரவையை எடுத்து, அத்துடன் 1/4 கப்
தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 கப் நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* அடுத்து அதில் சீரகத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தினுள் வைக்குமாறான ஒரு தட்டை எடுத்து,
அதில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி, ஒருமுறை தட்டை
தரையில் தட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அழகான தோற்றத்திற்காக மேலே சிறிது மிளகாய் தூளைத் தூவி, அந்த
தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து,
வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அது நன்கு குளிர்ந்த பின் அதை ஒரு தட்டில் தட்டி எடுத்துக்
கொள்ள வேண்டும். பின்பு, அந்த இட்லியை கத்தியால் பிட்சா போன்ற
தோற்றத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், இந்த இட்லி துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும்
பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ரவா இட்லி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications









