Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
வீட்டுல தோசை மாவு இல்லையா? அப்ப 10 நிமிடத்தில் இந்த நீர் தோசையும் கார சட்னியும் செஞ்சு சாப்பிடுங்க..
Instant Neer Dosa With Chutney: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? வீட்டில் உள்ளோர் தோசை வேண்டுமென்று கேட்கிறார்களா? அப்படியானால் 10 நிமிடத்தில் ஒரு நீர் தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்யுங்கள். இந்த டக்கென்று காம்பினேஷன் நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது வேலைக்கு செல்வோர் டக்கென்று செய்யக்கூடிய வகையிலும் இருக்கும்.
உங்களுக்கு நீர் தோசையும், கார சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீர் தோசை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
தோசைக்கு...
* அரிசி மாவு - 2 கப்
* தேங்காய் துருவல் - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
சட்னிக்கு...
* காஷ்மீரி மிளகாய் - 5
* பூண்டு - 5-6 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய வெங்காயம் - 2
* புளி - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் அரிசி மாவை லேசாக 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி மாவு, தேங்காய் துருவல், 2 கப்
நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன்
மீண்டும் 2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு சட்னி செய்வோம். அதற்கு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு,
உப்பு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், புளி சேர்த்து நன்கு
அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொண்டால், சுவையான
சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும்,
கலந்து வைத்துள்ள மாவை ஒருமுறை கலந்து, தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை
அள்ளி ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான நீர் தோசை தயார்.
முக்கியமாக இந்த தோசையை திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை.
* இந்த நீர் தோசையை, வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது
சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications