வீட்டுல தோசை மாவு இல்லையா? அப்ப 10 நிமிடத்தில் இந்த நீர் தோசையும் கார சட்னியும் செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Instant Neer Dosa With Chutney: காலையில் தோசை சுட வீட்டில் மாவு இல்லையா? வீட்டில் உள்ளோர் தோசை வேண்டுமென்று கேட்கிறார்களா? அப்படியானால் 10 நிமிடத்தில் ஒரு நீர் தோசை செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னியை செய்யுங்கள். இந்த டக்கென்று காம்பினேஷன் நிச்சயம் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது வேலைக்கு செல்வோர் டக்கென்று செய்யக்கூடிய வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு நீர் தோசையும், கார சட்னியையும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நீர் தோசை மற்றும் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Instant Neer Dosa With Chutney How To Make a Neer Dosa With Onion Chutney

தேவையான பொருட்கள்:

தோசைக்கு...

* அரிசி மாவு - 2 கப்
* தேங்காய் துருவல் - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்

சட்னிக்கு...

* காஷ்மீரி மிளகாய் - 5
* பூண்டு - 5-6 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* சின்ன வெங்காயம் - 10
* பெரிய வெங்காயம் - 2
* புளி - சிறிய துண்டு

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் அரிசி மாவை லேசாக 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த அரிசி மாவு, தேங்காய் துருவல், 2 கப் நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் மீண்டும் 2 கப் நீரை ஊற்றி நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு சட்னி செய்வோம். அதற்கு மிக்சர் ஜாரில் வரமிளகாய், பூண்டு, உப்பு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், புளி சேர்த்து நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சட்னி தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்து கொண்டால், சுவையான சட்னி தயார்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஒருமுறை கலந்து, தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை அள்ளி ஊற்றி நன்கு வேக வைத்து எடுத்தால், சுவையான நீர் தோசை தயார். முக்கியமாக இந்த தோசையை திருப்பிப் போட வேண்டிய அவசியம் இல்லை.
* இந்த நீர் தோசையை, வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

Image Courtesy: Today's Samayal

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 26, 2024, 8:16 [IST]
Desktop Bottom Promotion