Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
மீந்து போன சாதம் இருக்கா? அப்ப அதை தூக்கிப் போடாம.. இப்படி இட்லியை செய்யுங்க...
Instant Idli Using Leftover Rice: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? இட்லி, தோசை செய்யலாம் என்றால், அதற்கு கூட மாவு அரைக்க மறந்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் நேற்று சமைத்த சாதம் மீந்துள்ளதா? அப்படியானால் அந்த மீந்து போன சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் 5 நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லியை செய்யலாம் தெரியுமா?
தற்போது அரிசி விற்கும் விலைக்கு பழைய சாதத்தை தூக்கி போடவே மனசு வருவதில்லை. எப்படியாவது அதை வேறு வழியில் சாப்பிட முடியாத என்று பலரும் யோசிக்கலாம். எனவே உங்களுக்காக மீந்து போன சாதத்தைக் கொண்டு எப்படி சுட சுட பஞ்சுப் போன்ற இட்லியை செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த இட்லி வழக்கமாக நாம் செய்யும் இட்லியை விட மிகவும் மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும். முக்கியமாக 5 நிமிடத்தில் இதை செய்துவிடலாம்.

உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி இட்லி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதம் கொண்டு செய்யக்கூடிய இஸ்டன்ட் இட்லியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீந்து போன சாதம் - 1 கப்
* ரவை - 1/4 கப்
* தயிர் - 3-4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் மீந்து போன சாதத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தயிரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான அளவு உப்பு
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். (முக்கியமாக மாவை அரைத்த பின்
இட்லி சுடுவதாக இருந்தால், நீரை அதிகம் ஊற்ற வேண்டாம். இல்லாவிட்டால்
இட்லி தட்டையாக இருக்கும்.)
* பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீரை
நன்கு கொதிக்க விட வேண்டும்.
* அதே சமயம் இட்லி தட்டில், அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி,
இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து
எடுத்தால், சுவையான பஞ்சு போன்ற இட்லி தயார்.
குறிப்பு:
* இந்த மாவைக் கொண்டு வேண்டுமானால் தோசையையும் சுடலாம். இந்த
மாவில் தோசையை சுட்டு சாப்பிட்டால், நன்கு டேஸ்ட்டாக இருக்கும்.
* முக்கியமாக இந்த இட்லியை செய்த பின், சற்று ஆற வைத்து
சாப்பிடுங்கள். இதனால் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications