Latest Updates
-
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!
பருப்பு இல்லாமலே சூப்பரா இட்லிக்கு சாம்பார் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Idly Sambar Without Dal Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி செய்வீர்களா? அந்த இட்லிக்கு சட்னியைத் தான் அதிகமாக செய்வீர்களா? அப்படியே சாம்பார் செய்தாலும் பருப்பு பயன்படுத்தி தான் செய்வீர்களா? ஆனால் பருப்பு பயன்படுத்தாலேயே இட்லிக்கு சாம்பார் செய்யலாம் தெரியுமா?
இந்த சாம்பார் கிராமப்புறங்களில் உள்ள ஹோட்டல்களில் அதிகம் செய்யப்படுவதுண்டு. இப்படியான சாம்பார் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். உங்கள் வீட்டில் பருப்பு இல்லாத சமயங்களில் இந்த சாம்பாரை செய்யுங்கள்.

உங்களுக்கு பருப்பு இல்லாமல் இட்லி சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பருப்பு இல்லாமல் செய்யக்கூடிய இட்லி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/2 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - தேவையான அளவு
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கடலை மாவு - 3 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய பச்சை
மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் 1 1/2 கப் நீரை ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் உள்ள நீரை ஒரு
பாத்திரத்தில் வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மத்து கொண்டு
குக்கரில் உள்ளதை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் அதில் எடுத்து வைத்துள்ள நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் மசித்து வைத்துள்ளதை ஊற்றி, தேவையான அளவு நீரை ஊற்றி
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதி வந்ததும், அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு கடலை மாவை நீர் ஊற்றி கட்டிகளின்றி கரைத்து, சாம்பாருடன்
சேர்த்து நன்கு கிளறி, சாம்பார் சற்று கெட்டியாகத் தொடங்கும் வரை
கொதிக்க வைக்க வேண்டும்.
* சாம்பார் கெட்டியாகத் தொடங்கியதும், பெருங்காயத் தூள் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கலந்து இறக்கினால், சுவையான பருப்பு சேர்க்காத
இட்லி சாம்பார் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications











