Latest Updates
-
சிக்கன் கால் சூப் குடிச்சா.. உண்மையில் மூட்டு வலி குறையுமா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க.. -
ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி: உங்கள் வீட்டில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வெற்றி நிச்சயம்! -
300 ஆண்டுகளாக கதவு, பூட்டு என்றால் என்னவென்றே தெரியாத அதிசய இந்திய கிராமம் - காரணம் என்ன தெரியுமா? -
ரிஷப ராசியில் உதயமாகும் புதன்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியும்.. -
தேங்காய் தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தோல்வியில்தான் முடியுமாம் -
12 வருடம் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: ஜூன் 02 முதல் இந்த 4 ராசிக்கு கஷ்ட காலம் தொடங்குது.. உஷார்.. -
வெள்ளைப்பூசணி இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஆன்மீக குருக்கள் என்ற பெயரில் நடக்கும் அதிர்ச்சி மோசடி! உங்கள் பணத்தை இப்படித்தான் திருடுகிறார்களா?
ஹைதராபாத் ஸ்டைல் சுண்டல் பிரியாணி ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க, சிக்கன் பிரியாணி மாதிரியே இருக்கும்
Hyderabadi Chana Dal Biryani Recipe in Tamil: மதியம் வழக்கமான சாப்பாடு செய்யாமல் டேஸ்டியான ஒரு புதிய உணவை சமைக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? பிரியாணி என்றால் எப்போதும் சிக்கன், மட்டனில்தான் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை? சிம்பிளா சுண்டலை வைத்தும் அட்டகாசமான சுவையில் பிரியாணி செய்யலாம், அதுவும் ஹைதராபாத் ஸ்டைலில் செய்து வீட்டிலுள்ள அனைவரையும் அசத்தலாம்.

ஹைதராபாத் பிரியாணி என்றாலே பாஸ்மதி அரிசியில்தான் செய்யப்படும். இந்த சுண்டல் பிரியாணி சுவையானதாக இருப்பதோடு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த ஹைதராபாத் சுண்டல் பிரியாணி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அசைவ பிரியாணியே தோற்றுப் போகும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு ஹைதராபாத் சுண்டல் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் சுண்டல்பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி - 1 கப்
- தண்ணீர் - 6 கப்
- உப்பு - தேவையான அளவு
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- பிரிஞ்சி இலை -1
மசாலா அரைக்க:
- சுண்டல் - 1/2 கப்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1
- கிராம்பு - 1
- ஏலக்காய் - 1
- பிரிஞ்சி இலை -1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 1 (நீளவாக்கில் கீறியது)
- புதினா இலை - ஒரு கைப்பிடி
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தனியாத்தூள் - ஒன்றரை ஸ்பூன்
- தயிர் - 1/2 கப்
- எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (வறுக்க)
செய்முறை:
- பாஸ்மதி அரிசி மற்றும் கொண்டைக்கடலையை கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பெரிய வெங்காயத்தை நறுக்கி, பொன்னிறமாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 6 கப் நீர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதில் முழு கரம் மசாலாப் பொருட்களைச் சேர்க்கவும்.
- ஊறவைத்த அரிசியிலிருந்து கூடுதல் நீரை வடித்துவிடவும். நீர் கொதித்து பொங்கி வரும்போது, அரிசியைச் சேர்த்து, மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
- அரிசி 90 சதவீதம் வெந்த நிலையில் அதை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அதை ஆறவிடவும். அரிசியை வேகவைத்த அந்த நீரை தனியாக வைக்கவும்.
- அதே நீரில், ஊறவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, அது கெட்டியாகவும் மென்மையாகவும் வேகும் வரை சமைக்கவும். கூடுதல் நீரை வடித்துவிட்டு, வெந்த கொண்டைக்கடலையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய்யை ஒன்றாகச் சூடாக்கி, முழு கரம் மசாலாப் பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி போன்ற பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் புதினா இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் மசாலாத் தூள்களையும் உப்பையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து, நன்றாகக் கிளறவும். இறுதியாகத் தயிரைச் சேர்த்து, மீண்டும் நன்றாகக் கிளறவும்.
- சமைத்து வைத்துள்ள கொண்டைக்கடலையைச் சேர்த்து, கிரேவி சற்று கெட்டியாகும் வரை நன்றாகக் கொதிக்கவிடவும்.
- கிரேவியில் போதிய அளவு நீர் இருப்பதையும், அது மிகவும் வறண்டுவிடாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- கிரேவி தயாரானதும், சமைத்த சாதத்தை அதன் மேல் பரப்பி, நறுக்கிய புதினா இலைகளைத் தூவவும்.
- பின்னர் மேலே வதக்கிய வெங்காயத்தைத் தூவி, சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். கடாயை ஒரு மூடியால் இறுக்கமாக மூடி, அடுப்பின் தீயைக் குறைத்து வைக்கவும். இதை 15 நிமிடங்களுக்கு 'தம்' போட்டு வேகவிடவும்.
- 15 நிமிடங்களுக்கு பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு முட்கரண்டியால் பிரியாணியை மெதுவாகக் கிளறிவிடவும். அவ்வளவுதான் சூப்பரான ஹைதராபாத் சுண்டல் பிரியாணி ரெடி. இதை தயிர் வெங்காயத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications