Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மண மணக்கும் சாம்பார் வைக்க இந்த சாம்பார் பொடியை யூஸ் பண்ணுங்க.. இதோ ரெசிபி..!
சாம்பார் என்பது நமது இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் செய்யப்படும் மற்றும் அதிகளவு விரும்பி சாப்பிடும் ஒருவகை உணவுக்கான சைடிஷ் ஆகும்.. இது தமிழகத்தில் தினமுமே செய்து சாப்பிடுவர்கள்... இதன் செய்முறைகள் மாறினாலும், இதன் மீதான விருப்பம் எப்போதும் விட்டு போவதில்லை. இந்நிலையில் மணமான சாம்பார் வைக்க தேவையான சாம்பார் பொடியை தயார் செய்ய வேண்டும்.. அப்படி செய்யப்பட்ட பொடியில் வைக்கும் சாம்பாரின் டேஸ்டே செம்மையாக ருசியாக இருக்கும்..
இந்த சாம்பாரை காலையில் இட்லிக்கு ஆரம்பித்து மதியம் சாதத்திற்கும், இரவு தோசைக்கும் என நாள் முழுக்க வைத்து சாப்பிடலாம்.. அதனுடன் வடை, மினி இட்லி, கலவையான சாதம் என பலவித உணவுகளுக்கும் இந்த சாம்பாரை சைடிஷாக ஊற்றி சாப்பிடலாம்.. அத்தகைய இந்த சாம்பார் வைக்க தேவையான பாரம்பரியம் மிக்க சாம்பார் பொடியை செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. காய்ந்த மிளகாய்
2. துவரம் பருப்பு
3. கடலைப் பருப்பு
4. தனியா
5. மிளகு
6. கடுகு
7. விரலி மஞ்சள்
8. வெந்தயம்
செய்முறை
1. மேற்சொன்ன சாமான்களை வெயிலில் காய வைத்து சுத்தம் செய்து மிஷினில் நைசாக அரைத்துக் கொண்டால் போதும்.
2. மணம் கமழும் சாம்பார் பொடி ரெடி.
3. பின்குறிப்பு : எந்தப் பொடிகள் ஆனாலும் பொருட்களை வறுத்துப் பேப்பரில் ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் மிக்சியில் போட்டுப் பொடி செய்யவும். பொடியான பின்னும் கூட பேப்பரில் ஆற வைத்துக் கை போடாமல் ஸ்பூன் கொண்டு உபயோகப்படுத்தவும். அப்படிச் செய்தால் நீண்ட நாட்கள் வரும்.
4. இப்பொடியை தயாரிக்க பயன்படுத்தப்படும் மிளகாய் மற்றும் மல்லியை வெயிலில் நன்கு உலர வைத்து எடுத்து கொள்ளலாம். இதர பொருட்களை மட்டும் கூட வறுத்து அதனுடன் மிளகாய் மற்றும் மல்லியை போட்டு அரைத்து கொள்ளலாம். மேலும் இப்பொடியில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சாம்பார் பொடி நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
5. இதற்கிடையே மிளகாயை வெயிலில் அதிக நேரம் காய வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இதனை நீங்கள் மெஷினில் அரைக்க கொடுக்கும் பொழுது அரைத்து தருபவர்களுக்கு நாசிகளில் பிரச்சனை ஏற்படுகிறதாம். மேலும் இது மெஷின் சூட்டுலேயே நன்கு காய்ந்து அரைப்படும் என்றும் கூறுகிறார்கள்.
6. அதனால் காய்ந்த மிளகாய் மற்றும் கொத்தமல்லியை மூன்று மணி நேரம் நன்கு வெயிலில் காய வைத்து எடுத்தாலே போதுமானது.. நாள் முழுக்க காய வைக்க வேண்டிய தேவையில்லை..
7. இதில் மிக முக்கியமாக சாம்பார் பொடியை தயாரிக்கும் போது, சில பொருட்களை வறுத்து எடுக்க வேண்டியிருக்கும்.. அப்போது அவை கருகிவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications









