Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
இந்த சண்டே இந்த மீன் குழம்பை ட்ரை பண்ணுங்கள்..!
காரமான சுறா பூண்டுக் குழம்பை இந்த சண்டே உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.. இதில் புரதங்கள் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது.. வாங்க இந்த குழம்பை எப்படி செய்வது என்று ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
1. சுறா மீன்
2. தக்காளி
3. வெந்தயம்
4. கடுகு
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பிலை
7. கொத்துமல்லி இலை
8. மிளகுத் தூள்
9. சின்ன வெங்காயம்
10. எண்ணெய்
11. மஞ்சள் தூள்
12. தனியாத் தூள்
13. மிளகாய்த் தூள்
14. சீரகத் தூள்
15. புளி
16. முழுப்பூண்டு
17. உப்பு

செய்முறை
1. முதலில் புளியை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு சுறா மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
3. இப்போது கழுவிய சுறாமீனை துண்டுகளாக நறுக்கவும்.
4. பூண்டை உரித்துக் கொண்டு, அதனுடன் வெங்காயம், தக்காளி ஆகிய இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய வைக்கவும்.
6. எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்கவும். பின்னர் மேற்கண்டவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
7. அத்துடன் பூண்டு, தக்காளி, மிளகாய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். மேல் வதக்கியவற்றுடன் சுறா மீன் துண்டுகளை சேர்த்து மேலும் நன்கு வதக்கவும்.
8. மீன் துண்டுகள் அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்.
9. அதன் பிறகு மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் புளிக் கரைசல் ஆகிய இவற்றையும் சேர்த்து ஊற்றி அத்துடன் மிளகுத் தூள், சீரகத் தூள், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் படியாக கொதிக்கவிடவும்.
10. இப்போது காரசாரமான சுறா மீன் குழம்பு ரெடி..



Click it and Unblock the Notifications