Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சத்துக்கள் நிறைந்த கேழ்வரகு அடை செய்ய தெரியுமா?
இந்த தலைமுறையினர் கேழ்வரகு என்றால் என்ன? என்று கேட்பார்கள்.. அந்த அளவிற்கு நம் பாரம்பரியம் அழிந்துக் கொண்டிருக்கிறது.. கேழ்வரகு இலாமல் ஒருநாளும் சாப்பிடமாட்டார்கள் நம் பண்டைய தமிழர்கள்.. இதை சாப்பிட்டால் எந்தவித நோயும் வராது.. தென் தமிழகத்தில் கிராமங்களில் இன்றும் இது முக்கியமான காலை உணவாக செய்து சாப்பிடுகிறார்கள்..
அத்தகை இந்த கேழ்வரகு சிறுதானிய வகைகளில் ஒன்றாகும். இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் உதவி செய்கிறது. கேழ்வரகு வைத்து களி, புட்டு, தோசை, அடை, கூழ் என பல வகையான உணவுகளை சமைக்கலாம்... கேழ்வரகு சேர்த்து செய்யப்படும் எந்த வகை உணவாக இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் சத்தான ஆரோக்கியமான கேழ்வரகு அடை செய்வது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம். ஆம் இன்று கேழ்வரகு அடை எப்படி செய்வது என்பது பற்றிதான் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள போகிறோம்..

தேவையான பொருள்கள்
1. கேழ்வரகு மாவு
2. வெல்லம்
3. துருவிய தேங்காய்
4. தோல் நீக்கிய ஏலக்காய்
செய்முறை
1. வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணீரில் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடிப் பிடிக்காமல் கரைய விட வேண்டும்..
2. வெல்லம் கரைந்தவுடன் அதை இறக்கி வைத்து மண் வராத மாதிரி வடி கட்ட வேண்டும்..
3. வடிகட்டின வெல்ல நீரில் தேங்காய்த் துருவல், ஏலக்காய், கேழ்வரகு மாவு இவற்றைப் போட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கிளற வேண்டும்..
4. சுமார் ஐந்து நிமிடங்கள் கிளறி மாவு பாதி வெந்தவுடன் கீழே இறக்கி வைக்க வேண்டும்..
5. தேவைப்பட்டால் அல்லது மிகவும் உதிரியாக இருந்தால் சிறிது தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ள வேண்டும்.. அதன் பிறகு ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு இலையின் மேல் எண்ணெய் தடவி வைத்து மெல்லியதாகச் சிறிது பெரியதாக பக்குவமாக தட்டி தோசைக் கல்லில் போட வேண்டும்..
6. பின்னர் இதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றித் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும்.. இதில் இலைக்கு பதில் சுத்தமான பாலித்தீன் கவரில் கூட சிறிது எண்ணெய் தடவி அடை தட்டலாம்..
6. இதோ இப்போது சுவையான கேழ்வரகு அடை ரெடி. இதனை அடிப்படையாகக் கொண்டு கோதுமை மாவையும் கூட பயன்படுத்தி நாம் அடை செய்யலாம்.சுவை சும்மா சூப்பராக இருக்கும்.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..
கேழ்வரகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். சர்க்கரை வியாதியை கூட கட்டுப்படுத்தலாம். ஊட்டச்சத்து மிகுந்தது.. உடலுக்கு வலு கொடுக்கும் இந்த ராகி அடையை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்..



Click it and Unblock the Notifications











