Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்.. மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வைச்சுக் கொடுங்க.. சளி புடிக்காது..!
மழைக்காலம் வந்தாலே நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் சளி.. சளி பிடித்தால் காய்ச்சல் வரும். பின்னர் கூடவே இருமலும் வரும்.. இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசையாக வந்து நிற்கும்.
இவற்றையெல்லாம் சரிச் செய்ய வேண்டும் என்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம்.. ஆனால் அது 7 நாட்கள் வரை இருந்து விட்டுதான் போகும்.. அப்போதும் கூட சரியாகாது.. அதனால் மழைக்காலத்தில் எப்போதுமே இந்த மிளகு ரசத்தை வாரம் 2 முறை வைத்து வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுங்கள்.. இந்த ரசத்தில் மருத்துவ குணங்கள் ஏராளம். அதனால் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. வாங்க இந்த மிளகு ரசத்தை வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. புளி
2. தனியா
3. மிளகு
4. துவரம் பருப்பு
5. சீரகம்
6. கடுகு
7. காய்ந்த மிளகாய்
8. உப்பு
செய்முறை
1. முதலில் புளியை ஒன்றரை ஆழாக்கு தண்ணீரில் நன்கு கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
2. இப்போது மேற்கண்ட புளித் தண்ணீருடன் உப்பு தேவையான அளவு போட்டு சுமார் எட்டு நிமிடங்கள் வரையில் நன்கு கொதிக்கவிடவும்.
3. பிறகு தனியா, மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகிய இவற்றை எல்லாம் பச்சையாக வைத்து அரைத்துக் கடைசியில் சீரகத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.. அரைத்த அந்த விழுதைக் கொதிக்கும் புளித் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்...
4. பின்னர் கொதித்த ரசத்தை இறக்கி வைத்து உடன் கடுகையும், சீரகத்தையும் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும். தேவையானால் கருவேப்பில்லை, கொத்தமல்லி ஆகிய இவற்றையும் கழுவி சேர்த்துக் கொள்ளலாம்.
5. இதோ இப்போது சுவையான மிளகு ரசம் தயார்.
மிளகு ரசத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். பித்தம் தணியும். குழந்தைகளுக்கு நல்லது. அதனால் இந்த மழைக்காலத்தில் மிளகு ரசத்தை கண்டிப்பாக செய்துக் கொடுங்கள்..
மிளகின் நன்மைகள்
1. மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
2. தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் திறன் நம் உடலுக்குள் நுழையும். இதனால் புதிதாக நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்து போராடி நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும்.
முக்கியமான குறிப்பு
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ரசத்தை சாப்பிடக் கூடாது.. காராணம் காரமாக இருந்தால் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணும். அதனால் அவர்களுக்கு இந்த மிளகு ரசத்தை கொடுக்காமல் இருப்பதே நல்லது..



Click it and Unblock the Notifications