Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகு ரசம்.. மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வைச்சுக் கொடுங்க.. சளி புடிக்காது..!
மழைக்காலம் வந்தாலே நாம் அனைவரும் எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றுதான் சளி.. சளி பிடித்தால் காய்ச்சல் வரும். பின்னர் கூடவே இருமலும் வரும்.. இதனால் மூக்கடைப்பு, நெஞ்சு எரிச்சல், தலைவலி, காதுவலி, மூச்சி திணறல் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் வரிசையாக வந்து நிற்கும்.
இவற்றையெல்லாம் சரிச் செய்ய வேண்டும் என்று மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம்.. ஆனால் அது 7 நாட்கள் வரை இருந்து விட்டுதான் போகும்.. அப்போதும் கூட சரியாகாது.. அதனால் மழைக்காலத்தில் எப்போதுமே இந்த மிளகு ரசத்தை வாரம் 2 முறை வைத்து வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுங்கள்.. இந்த ரசத்தில் மருத்துவ குணங்கள் ஏராளம். அதனால் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.. வாங்க இந்த மிளகு ரசத்தை வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. புளி
2. தனியா
3. மிளகு
4. துவரம் பருப்பு
5. சீரகம்
6. கடுகு
7. காய்ந்த மிளகாய்
8. உப்பு
செய்முறை
1. முதலில் புளியை ஒன்றரை ஆழாக்கு தண்ணீரில் நன்கு கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.
2. இப்போது மேற்கண்ட புளித் தண்ணீருடன் உப்பு தேவையான அளவு போட்டு சுமார் எட்டு நிமிடங்கள் வரையில் நன்கு கொதிக்கவிடவும்.
3. பிறகு தனியா, மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகிய இவற்றை எல்லாம் பச்சையாக வைத்து அரைத்துக் கடைசியில் சீரகத்தையும் சேர்த்து அரைக்க வேண்டும்.. அரைத்த அந்த விழுதைக் கொதிக்கும் புளித் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்...
4. பின்னர் கொதித்த ரசத்தை இறக்கி வைத்து உடன் கடுகையும், சீரகத்தையும் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும். தேவையானால் கருவேப்பில்லை, கொத்தமல்லி ஆகிய இவற்றையும் கழுவி சேர்த்துக் கொள்ளலாம்.
5. இதோ இப்போது சுவையான மிளகு ரசம் தயார்.
மிளகு ரசத்தை அடிக்கடி எடுத்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். பித்தம் தணியும். குழந்தைகளுக்கு நல்லது. அதனால் இந்த மழைக்காலத்தில் மிளகு ரசத்தை கண்டிப்பாக செய்துக் கொடுங்கள்..
மிளகின் நன்மைகள்
1. மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிக அளவு இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் சீராகும்.
2. தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் அதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் திறன் நம் உடலுக்குள் நுழையும். இதனால் புதிதாக நம் உடலுக்குள் வரும் தொற்றுகளை எதிர்த்து போராடி நம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும்.
முக்கியமான குறிப்பு
ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ரசத்தை சாப்பிடக் கூடாது.. காராணம் காரமாக இருந்தால் அவர்களுக்கு வேறு பிரச்சினைகளை உண்டு பண்ணும். அதனால் அவர்களுக்கு இந்த மிளகு ரசத்தை கொடுக்காமல் இருப்பதே நல்லது..



Click it and Unblock the Notifications











