Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்கள் வைக்கும் குழம்புக்கு சுவைக்கூட்டும் வெங்காய வடகம் பற்றி தெரியுமா? இதோ ரெசிபி..!
தென் மாவட்டங்களில் அதிகமாக மத்திய சாப்பாட்டிற்கு குழம்பு சாம்பார், காரக்குழம்பு என எது செய்து சாப்பிடுவார்கள்.. அதில் வெங்காய வடகத்தை வறுத்துப் போட்டால் குழம்பு வாசனையிலும் ருசியிலும் செம்மையாக இருக்கும்.. இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதிலும் மீன் குழம்புக்கு அலாதியாக இருக்கும்.. கட்டி இழுக்கும். இந்த ரெசிபியை வீட்டில் செய்ய டிப்ஸ் இதோ...
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1.5 கப்
பூண்டு பற்கள் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுந்து - 1/4 கப் ( 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் )
கடுகு - 1
துவரம்பருப்பு - 1 Tsp
சீரகம் - 1.5 Tsp
வெந்தையம் - 1/2 Tsp
சிவப்பு மிளகாய்ப் பொடி - 1 Tsp
மஞ்சள் - 1 Tsp
உப்பு - தேவைக்கு ஏற்ப
ஆமணக்கு எண்ணெய் - 2 Tsp
சமையல் எண்ணெய்

செய்முறை
1. முதலில் சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்..
2. அதில் கடுகு , வெந்தையம், துவரம்பருப்பு, சீரகம், உப்பு, சிவப்பு மிளகாய்ப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்குக் கலந்து கொள்ளவும்.
3. அடுத்ததாக ஊற வைத்த உளுத்தம் பருப்பை மிக்ஸியில் மொர மொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. அரைத்த அந்த உளுந்தை வெங்காயக் கலவையில் சேர்த்துக் கலந்து கொள்ளவும். தற்போது அந்தக் கலவையை எலுமிச்சைப் பழம் அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை இரவு முழுவதும் அப்படியே உலர்த்தி வைத்து விடுங்கள்..
5. மறுநாள் அந்த உருளை உடைத்து அதில் ஆமணக்கு எண்ணெய் தெளித்து பிரட்டுங்கள். தற்போது மீண்டும் அவற்றை உருளைகளாக உருட்டி வையுங்கள்.
6. இப்படி அதில் நீர் வற்றும் போது சிறிது ஆமணக்கு எண்ணெயை கலந்து உருட்டுங்கள்.. பின்னர் அதனை நன்றாக வெயிலில் உலர வைக்கலாம்.. அல்லது வெயிலுக்கு அருகில் நிழல் உள்ள இடத்தில் ஒரு தட்டில் வைத்து உலர்த்தலாம்..
7. இதற்குக் குறைந்தது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் எடுக்கும். பின் அவை நன்கு உலர்ந்ததும் டப்பாவில் அடைத்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குழம்பில் தாளித்துக் கொட்டினால் குழம்பு ருசியாக இருக்கும்.
8. இந்த உருண்டைகளை சில்வர் டப்பாவில் அடைத்து வைப்பது நல்லது..



Click it and Unblock the Notifications