Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
இருமல், சளியை விரட்டும் துளசி ரசம் செய்ய ரெசிபி..!
மழைகாலம் தொடங்கி விட்டாலே எங்கு பார்த்தாலும் குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி, தலை பாரம் என தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்.. அவற்றில் இருந்து விடுபடவும், அவை வராமல் தடுக்கவும் இந்த துளசி ரசத்தை வாரம் ஒருமுறையாவது உங்கள் வீட்டில் வைத்து கொடுங்கள்.. முக்கியமாக இந்த துளசி ரசம் குழந்தைகளுக்கு ஏற்றது..
காரணம் துளசியில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது.. துளசியில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சரி வாங்க இந்த துளசி ரசத்தை எப்படி வைப்பது என ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. துளசி இலை
2. மிளகு
3. புளி
4. கடுகு
5. எண்ணெய்
6. உப்பு
7. துவரம் பருப்பு
8. தனியா
9. சீரகம்
செய்முறை
1. முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
2. புளியை மண் இல்லாமல் நன்றாகக் கரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அப்படியே மறுபக்கத்தில் துளசி இலைகளை நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்..
3. பின்னர் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் அரைத்துப் புளிக் கலவையுடன் சேர்க்கவும்.
4. இப்போது ஒரு கொதி வந்த மாத்திரத்தில் துளசியையும் அரைத்து மேற்கண்ட புளிக் கலவையுடன் சேர்த்து நுரைத்ததும் இறக்கி வைக்கவும்.
5. பின்னர் எண்ணெய்யில் கடுகையும் தாளித்து அதில் கொட்டிக் கலக்கவும்.
6. இதோ இப்போது சுவையான துளசி ரசம் தயார். இது இருமல், சளிக்கு நல்ல மருந்தாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளுகு ஏற்ற ரசமாகும்..
இருமல், சளி ஆகிய இவற்றை கட்டுப்படுத்தி தேவை இல்லாத கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற துளசி ரசம் உதவுகிறது.



Click it and Unblock the Notifications