Latest Updates
-
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம்
இருமல், சளியை விரட்டும் துளசி ரசம் செய்ய ரெசிபி..!
மழைகாலம் தொடங்கி விட்டாலே எங்கு பார்த்தாலும் குழந்தைகளுக்கு சளி, இருமல், தொண்டை வலி, தலை பாரம் என தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்.. அவற்றில் இருந்து விடுபடவும், அவை வராமல் தடுக்கவும் இந்த துளசி ரசத்தை வாரம் ஒருமுறையாவது உங்கள் வீட்டில் வைத்து கொடுங்கள்.. முக்கியமாக இந்த துளசி ரசம் குழந்தைகளுக்கு ஏற்றது..
காரணம் துளசியில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது.. துளசியில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை சளி, காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பொதுவான நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சரி வாங்க இந்த துளசி ரசத்தை எப்படி வைப்பது என ரெசிபியை தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருள்கள்
1. துளசி இலை
2. மிளகு
3. புளி
4. கடுகு
5. எண்ணெய்
6. உப்பு
7. துவரம் பருப்பு
8. தனியா
9. சீரகம்
செய்முறை
1. முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை ஊற வைக்கவும்.
2. புளியை மண் இல்லாமல் நன்றாகக் கரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அப்படியே மறுபக்கத்தில் துளசி இலைகளை நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்..
3. பின்னர் ஊற வைத்த பொருட்களை மிக்சியில் அரைத்துப் புளிக் கலவையுடன் சேர்க்கவும்.
4. இப்போது ஒரு கொதி வந்த மாத்திரத்தில் துளசியையும் அரைத்து மேற்கண்ட புளிக் கலவையுடன் சேர்த்து நுரைத்ததும் இறக்கி வைக்கவும்.
5. பின்னர் எண்ணெய்யில் கடுகையும் தாளித்து அதில் கொட்டிக் கலக்கவும்.
6. இதோ இப்போது சுவையான துளசி ரசம் தயார். இது இருமல், சளிக்கு நல்ல மருந்தாக இருக்கும். முக்கியமாக குழந்தைகளுகு ஏற்ற ரசமாகும்..
இருமல், சளி ஆகிய இவற்றை கட்டுப்படுத்தி தேவை இல்லாத கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்ற துளசி ரசம் உதவுகிறது.



Click it and Unblock the Notifications










