Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
வாயுத் தொல்லையை நீக்கும் இஞ்சித் துவையல்.. இதை ஒருமுறை வீட்டில் ட்ரை பண்ணுங்கள்..!
இஞ்சி துவையல் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. இதனை இந்த மழைக்காலங்களில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்..
இந்த இஞ்சி துவையல் ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மிக முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளாலாம் வாங்க..
தேவையான பொருள்கள்
1. இஞ்சி
2. உளுத்தம் பருப்பு
3. மிளகு
4. உப்பு
5. புளி
செய்முறை
1. முதலில் இஞ்சியை தோல் எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கி சுத்தம் செய்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
2. அதே போல உளுத்தம் பருப்பு, மிளகு, உப்பு, புளி ஆகிய இவை அனைத்தையும் சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
3. பிறகு வதக்கிய இஞ்சியையும் மற்ற சாமான்களையும் மிக்சியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.
4. இதோ இப்போது சுவையான இஞ்சித் துவையல் தயார். இது பித்த வியாதிகளுக்கு நல்லது. இஞ்சித் துவையல் அடிக்கடி செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
5. இந்த இஞ்சி துவையலை இட்லி , தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.. ருசியாக இருக்கும்.. சிறு குழந்தைகளுக்கும் சற்று காரம் சேர்க்காமல் கொடுக்கலாம்.. அதனால் அடிக்கடி சளி புடிக்காது..
இஞ்சியின் நன்மைகள் இதோ
1. விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.
2. ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
3. நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
4. பல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
5. இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.



Click it and Unblock the Notifications