Latest Updates
-
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்..
இரவு மிஞ்சிய சாதம் இருந்தால் போதும்.. எளிதான காலை உணவு 10 நிமிடத்தில் ரெடி..! எப்படி தெரியுமா? வீடியோ
வீட்டில் உள்ள அனைவருமே காலையில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய உணவுகளை தேடி தேடி செய்ய அதிகமாக நேரம் செலவாகும்.. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் தேவைகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் காலை உணவாக ரொட்டி, ஆம்லெட் இட்லி, தோசை போன்றவற்றை செய்தும் சாப்பிட்டும் சலித்து இருப்பீர்கள்.. அதனால் சில எளிய சமையல் குறிப்புகளைத் தேடுகிறீர்களானால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..
அதாவது முதல் நாள் இரவு மிச்சம் ஆன சாதத்தில் இந்த காலை உணவை செய்யலாம்.. ரெம்பவே ஈஸிதான்.. இதைச் செய்ய, உங்களுக்கு முந்தைய இரவில் மீதமான சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு தேவைப்படும். இதைத் தயாரிக்க அதிக மசாலாப் பொருட்கள் தேவையில்லை என்பதுதான் சிறப்பு. எனவே எஞ்சியிருக்கும் சாதத்தில் இருந்து எப்படி சுவையான-ஆரோக்கியமான காலை உணவை விரைவாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்
இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கு
ஒரு கப் அரிசி
பச்சை கொத்தமல்லி
பச்சை மிளகாய்
சுவைக்கு தகுந்த உப்பு
அரை ஸ்பூன் ஏனோ
எண்ணெய்
செய்முறை
1. முதல் நாள் இரவில் மீதியான சாதத்தை மிக்ஸியில் தண்ணீரில் கலந்து கெட்டியான கரைசல் போல அரைத்து கொள்ள வேண்டும்.. இப்போது வேகவைத்த மற்றும் தோல் நீக்கிய இரண்டு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு இரண்டையும் பேஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கவும். இப்போது மற்ற விஷயங்களையும் சேர்க்க வேண்டும்.
2. முதலில் இந்த கரைசலில் 4 முதல் 5 பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்போது உங்கள் விருப்பப்படி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். அதன் பிறகு அதில் உப்பு சேர்க்கவும். தில் ஒரு ஸ்பூன் லெமன் சேர்க்கவும். அதன் பிறகு, கரண்டியால் நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
3. இப்போது அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கரைத்து வைத்த மாவை உங்கள் கை அல்லது கரண்டியால் கவனமாக எடுத்து, பக்கோடா வடிவத்தில் எண்ணெயில் விட வேண்டும்.. இப்போது அவற்றை எண்ணெயில் நன்றாக வேக வைக்க வேண்டும்..
4. பின்னர் அவை பொன்னிறமாக மாறத் தொடங்கும் போது, அவற்றை சில டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும். இப்போது டீ மற்றும் காபியுடன் பரிமாறலாம்..
5. இதை குழந்தைகளுக்கு காலை உணவு அல்லது மதிய உணவு பாக்ஸிலும் கொடுக்கலாம். இந்த ரெசிபியை அதிக பொருட்கள் இல்லாமல் 10 நிமிடங்களில் செய்யலாம். ருசிக்கேற்ப கொத்தமல்லியுடன் வெங்காயம் அல்லது காய்கறிகளையும் சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications












