Latest Updates
-
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
காலை உணவுக்கு இந்த அவல் உப்புமா செய்து சாப்பிடுங்கள்..!
அவல் உப்புமா உடலுக்கு நலம் பயக்கும்.. இது அரிசியின் இன்னொரு பரிமாணம் ஆகும்.. தென் மாவட்ட மக்கள் இதை வாரம் ஒருமுறையாவது செஞ்சு சாப்பிடுவாங்க.. சத்தான அதே நேரத்தி செய்வதற்கும் எளிதான காலை உணவாகும்.. தமிழில் அவல் என்றால் தட்டையான அரிசி அல்லது அரிசி துகள்கள் என்று அர்த்தம்.. இது இந்தியில் போஹா என்றும் அழைக்கப்படுகிறது.
அவலில் பல வகைகள் உள்ளன.. தடித்த, மெல்லிய, சிவப்பு அரிசி செதில்கள் போன்றவை. இந்த ரெசிபியில் மெல்லிய அவல் பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ளது.. காரணம் இந்த மெல்லிய அவல் செய்வதற்கு மிக எளிது.. நீங்கள் கெட்டியான அவல் பயன்படுத்தினால், உப்புமா செய்வதற்கு முன் ஊற வைக்க வேண்டும். அவல் அதே அளவு தண்ணீரில் கழுவி ஊற வைக்கவும். நீங்கள் அதை வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீர் அல்லது வழக்கமான வெப்பநிலையில் ஊர வைக்கலாம்... இதில் ஊறவைக்கும் நேரம் மட்டுமே வேறுபடும்..

தேவையான பொருள்கள்
1. அவல்
2. காய்ந்த மிளகாய்
3. தேங்காய்த் துருவல்
4. டேபிள் சால்ட்
5. உளுத்தம் பருப்பு
6. கடுகு
7. பெரிய வெங்காயம்
8. முந்திரிப் பருப்பு
செய்முறை
1. முதலில் அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.. பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.
2. பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்துக் கொண்டு வெங்காயத்தை வதக்கி, பிறகு அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்..
3. பின்னர் துருவிய தேங்காயையும் அதில் சேர்க்க வேண்டும்..
4. இப்போது மேலும் நன்றாகக் கிளறி கீழே இறக்கி வைத்து சுவையை கூட்ட வேண்டும் என்றால் எலுமிச்சம் பழத்தை பிழிய வேண்டும்..
5. அதே போல, ஒருவேளை உருளைக் கிழங்கைச் சேர்க்க வேண்டும் என்றால் அதனைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துப் பின்பு உருளைக் கிழங்கையும் போட்டு ஒரு கரண்டி தண்ணீர் விட்டு அது நன்கு வதங்கிய பின்பு வெங்காயத்தையும் வதக்கி விட வேண்டும்.. பின்னர் அதில் அவல் சேர்க்க வேண்டும்.. இப்போது இன்னும் சுவையான அவல் உப்புமா ரெடி..
அவலை வேக வைத்து தயிருடன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணிவதுடன் சீதபேதி போன்ற நோய்களுக்கும் நல்லது. அதுமல்ல்ட்மல்லாமல் இதில் குழந்தைகளுக்கு பிடித்தமான பாயாசம் செய்துக் கொடுக்கலாம்.. பூஜைகளில் நிவேதனமாக அவலை பொங்கலாகவும் இனிப்பாகவும் செய்து வைக்கலாம்.. முக்கியமாக கிருஷணர் கோவில்களில் அவல் அபாயாசம்தான் நிவாதம்னமாக வைப்பார்கள்..



Click it and Unblock the Notifications