Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கிராமத்து ஸ்டைல் தக்காளிப் பச்சடி செய்ய தெரியுமா? இதோ ரெசிபி..!
நாம் அனைவரும் அன்றாடச் சமையலில் அதிகமாக உபயோகப்படுத்தும் மிக முக்கியமான பொருள் தக்காளி. மருத்துவ நலன்கள் நிறைந்த தக்காளியை அப்படியே சாப்பிடலாம் என்றாலும் வீட்டிலுள்ள சில பொருட்களைத் வைத்து அதைப் பச்சடியாகச் சாப்பிடும்போது தனிச்சுவையைத் தரும்.. அது உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
அத்தகைய தக்காளியில் ருசியான கிராமத்து ஸ்டைல் தக்காளி பச்சடி செய்யலாம்.. தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி பச்சடியை அதிகமாக அவர்கள் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொளவார்கள்.. பின்னர் அதனை இட்லி, தோசை, சாதம் , சப்பாத்தி, பழைய சோறு என அனைத்திற்க்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.. அனைத்து வைட்டமின் சத்துக்களும் அடங்கிய இந்த தக்காளிப் பச்சடியை செய்வது எப்படி? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருள்கள்
1. துவரம்பருப்பு
2. மஞ்சள்தூள்
3. பழுத்த தக்காளி
4. சின்ன வெங்காயம்
5. பச்சை மிளகாய்
6. கருவேப்பில்லை
7. சாம்பார் பொடி
8. உப்பு
9. மல்லித்தழை
10. எண்ணெய்
11. கடுகு
12. உளுத்தம்பருப்பு
13. பெருங்காயம்
14. காய்ந்த மிளகாய்
செய்முறை
1. முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்..
2. பின்னர் சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கிக் கொள்ள வேண்டும்..
3. அதன் பிறகு பச்சை மிளகாயை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
4. துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து அரை அவியலாக அவித்துக் கொள்ளவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, சாம்பார் பொடி சேர்த்து வேகவிடவும்.
5. மேற்கண்ட அனைத்தும் வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு தாளித்து, பருப்பு, தக்காளி கலவையில் சேர்க்க வேண்டும்..
6. தக்காளி பச்சடியை இறக்கும் போது நறுக்கிய மல்லித் தழையை தூவி கொதித்ததும் இறக்கிவிட வேண்டும்..
7. இதோ சுவையான தக்காளிப் பச்சடி தயார்.
தக்காளிப் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடை காலங்களில் இதனை செய்து சாப்பிடலாம். மழைக்காலங்களில் மதிய சாப்பாட்டிற்கு நல்ல சைடிஸ் போல இருக்கும்.. ஊறுகாய் சாப்பிடக்க்கூடாது என்பவர்கள் இந்த தக்காளி பச்சடியை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.. சுவை அலாதியாக இருக்கும்..
இந்த தக்காளி பச்சடியை குழந்தைகளுக்கும் ஸ்கூலுக்கு லஞ்ச் பக்ஸ்ல வைச்சுக் கொடுக்கலாம்.. வேலைக்கு செல்பவர்களுக்கும் ஆபீஸ்க்கு லஞ்சுக்கு கட்டிக் கொடுக்கலாம்.. மிச்சம் வைக்காமல் எல்லாத்தையும் சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த தக்காளி பச்சடி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சைடிஷ் ஆகும்..



Click it and Unblock the Notifications