ஸ்பெஷல் காலிஃபிளவர் புலாவ் செய்ய ரெசிபி..!

Posted By:

அரிசி உணவுகள் எப்பொழுதும் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்துவிடலாம்.. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அரிசி வகை உணவுகளைதான் செய்வார்கள்.. அப்படிப்பட்ட சாதம் ரெசிபிகளில், தக்காளி சாதம், ஆலு சாதம், ஜீரா ரைஸ் ஆகியவை மிகவும் பொதுவான உணவுகளாகும். காலிஃபிளவரிலும் சுவையான சாதம் செய்யலாம் தெரியுமா? ஆம் வாங்க இந்த பதிவில் காலிஃபிளவர் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..

காலிஃபிளவரில் உள்ள நன்மைகள்

ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி இந்த காலிஃபிளவர்.. இதில் வைட்டமின் சி, கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காலிஃபிளவர் பயனுள்ள சத்துகளை கொடுக்கிறது.. மேலும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், கருவின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

how to make a special cauliflower rice recipe

காலிஃபிளவர் புலாவ் செய்ய் தேவையானவை

காலிபிளவர் - 2 கப்

அரிசி - 2 கப்

பச்சை பட்டாணி - 1/2 கப்

பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1/4 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 / 4 டீஸ்பூன்

உப்பு: சுவைக்கு போதுமான

எண்ணெய்: போதுமானது

செய்முறை:

1. முதலில் அரிசியை சமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..

2. பிறகு கடாயில் சிறிது தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து காலிஃபிளவர் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்..

3. 10 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்.

3. இப்போது மீண்டும் காலிஃப்ளவரை நல்ல தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். காலிஃபிளவர் ஆறிய பிறகு, விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.

4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காலிஃப்ளவரை பொன்னிறமாகும் வரை வறுத்து, தனியே வைக்கவும்.

5. மற்றொரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.

6. இப்போது முன்பு வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.. ஒரு முறை வதங்கிய பின் அதனுடன் அரிசியை சேர்த்து வதக்க வேண்டும்..

7. முழு கலவையை கலக்கும்போது 1/4 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து முழு கலவையையும் வதக்கவும்.

8. இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான், சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் சாதம் தயார். இது மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சப்பிடலாம்.. முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்லும் கணவன் அல்லது மனைவிக்கும் ஏற்ற சூப்பரான லஞ்சாக இருக்கும்..

[ of 5 - Users]
Story first published: Sunday, September 8, 2024, 19:58 [IST]
Desktop Bottom Promotion