Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
ஸ்பெஷல் காலிஃபிளவர் புலாவ் செய்ய ரெசிபி..!
அரிசி உணவுகள் எப்பொழுதும் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்துவிடலாம்.. குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள் அரிசி வகை உணவுகளைதான் செய்வார்கள்.. அப்படிப்பட்ட சாதம் ரெசிபிகளில், தக்காளி சாதம், ஆலு சாதம், ஜீரா ரைஸ் ஆகியவை மிகவும் பொதுவான உணவுகளாகும். காலிஃபிளவரிலும் சுவையான சாதம் செய்யலாம் தெரியுமா? ஆம் வாங்க இந்த பதிவில் காலிஃபிளவர் ரெசிபி எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்..
காலிஃபிளவரில் உள்ள நன்மைகள்
ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி இந்த காலிஃபிளவர்.. இதில் வைட்டமின் சி, கே மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு காலிஃபிளவர் பயனுள்ள சத்துகளை கொடுக்கிறது.. மேலும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், கருவின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவியாக இருக்கும். எனவே கர்ப்பிணிகள் இதனை வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

காலிஃபிளவர் புலாவ் செய்ய் தேவையானவை
காலிபிளவர் - 2 கப்
அரிசி - 2 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 / 4 டீஸ்பூன்
உப்பு: சுவைக்கு போதுமான
எண்ணெய்: போதுமானது
செய்முறை:
1. முதலில் அரிசியை சமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்..
2. பிறகு கடாயில் சிறிது தண்ணீர், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து காலிஃபிளவர் சேர்த்து 10 நிமிடம் வதக்க வேண்டும்..
3. 10 நிமிடம் கொதித்ததும் தண்ணீரை வடித்து காலிஃப்ளவரை தனியாக வைக்கவும்.
3. இப்போது மீண்டும் காலிஃப்ளவரை நல்ல தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். காலிஃபிளவர் ஆறிய பிறகு, விரும்பிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காலிஃப்ளவரை பொன்னிறமாகும் வரை வறுத்து, தனியே வைக்கவும்.
5. மற்றொரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
6. இப்போது முன்பு வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.. ஒரு முறை வதங்கிய பின் அதனுடன் அரிசியை சேர்த்து வதக்க வேண்டும்..
7. முழு கலவையை கலக்கும்போது 1/4 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து முழு கலவையையும் வதக்கவும்.
8. இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான், சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் சாதம் தயார். இது மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு சப்பிடலாம்.. முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அலுவலகம் செல்லும் கணவன் அல்லது மனைவிக்கும் ஏற்ற சூப்பரான லஞ்சாக இருக்கும்..



Click it and Unblock the Notifications











