Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்க குழந்தைக்கு செட்டிநாடு ஸ்டைலில் கோழி ரசம் செஞ்சு கொடுங்க.. சளி, இருமல் வரவே வராது..!
குழந்தைகளின் உடலுக்கு அதிக புரதச் சத்தை தருகிரது செட்டிநாடு கோழி ரசம்.. அதனால் குழந்தைகளுக்கு இந்த ரசத்தை வாரம் ஒருமுறையாவது செய்து கொடுங்கள்..அதிலும் இனி வரும் காலம் தொடர்ந்து மழை மற்றும் பனி பொழியும் காலமாக இருக்கும்.. அதனால் இந்த ரசம் குழந்தைகளுக்கு சளி , இருமல் மற்றும் காய்ச்சல் வராமல் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்..
தென் மாவட்டங்களில் இன்றும் இது போல கோழி ரசம் செய்து குழந்தைகள் முதல் பெரியவர்கள வரை அனைவரும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அதிலும் செட்டிநாடு ஸ்டைலில் செய்தால் செம்மையாக இருக்கும்.. குழந்தைகள் மிச்சம் வைக்காமல் முழுவதுமாக சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.. வாங்க அதை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் ..

தேவையான பொருள்கள்
1. சிக்கன்
2. பட்டை
3. புளி
4. தனியாத் தூள்
5. மிளகாய்த் தூள்
6. மஞ்சள் தூள்
7. வெந்தயம்
8. மிளகுத்தூள்
9. பச்சை மிளகாய்
10. இலவங்கம்
11. ஏலக்காய்
12. இஞ்சி, பூண்டு விழுது
13. வெங்காய விழுது
14. தக்காளி
15. கருவேப்பிலை
16. உப்பு
17. எண்ணெய்
செய்முறை
1. சிக்கனை முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்..
2. இப்போது சுத்தம் செய்த சிக்கனை துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்..
3. மறுபுறம் புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, லவங்கம் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்..
5. பின்னர் கீறிய பச்சை மிளகாய், அரைத்த வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி, தேவையான அளவு கருவேப்பில்லை ஆகிய இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக நன்கு வதக்கவும்.
6. இப்போது தனியாத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு ஆகிய இவற்றுடன் சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்..
7. சிக்கன் நன்கு வதங்கிய மாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக விட வேண்டும்..
8. சிக்கன் வெந்து கொண்டு இருக்கும் அதே நேரத்தில் புளியைக் கரைத்து மண் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்..
9. சிக்கன் வெந்ததும் புளித் தண்ணீரை அதில் ஊற்றி சிறிது நேரம் அப்படியே அடுப்பில் வைக்கவும்.
10. பின்னர் சிக்கனை மட்டும் வடிகட்டி தனியாக எடுத்து விடவும்.
11. நீங்கள் பரிமாறும் சமயத்தில் சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி ரசத்தில் போட்டுப் பரிமாறவும்.
12. இதோ சுவையான செட்டிநாடு கோழி ரசம் தயார். கண்டிப்பாக வீட்டில் இதை ட்ரை பண்ணுங்கள்.. உங்க குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்..



Click it and Unblock the Notifications