Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
கேரட் இஞ்சி சூப் ரெசிபி... இந்த ஈஸியான சூப் உங்க நோயெதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்குமாம்...!
Carrot Ginger Soup Recipe in Tamil: காலநிலை மாற்றத்தால் இப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையும், பனியும் பொழிகிறது. எனவே பலரும் பருவகால நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டிய அவசியம்.
கேரட் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான வீடுகளில் கேரட்டை பொரியலாகத்தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் கேரட்டை எண்ணெயில் சமைக்கும் போது அதிலிருந்து சில ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். எனவே கேரட்டை வேகவைத்து அதில் உணவுகளை சமைக்கும் போது அதிலிருந்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
ஆரோக்கியமானது சுவையாக இருக்காது என்ற பொதுவான கருத்தை நொறுக்கும் சில உணவுகள் உள்ளது. அந்த வகையில் கேரட் இஞ்சி சூப் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது மட்டுமல்ல, சுவையாகவும் இருக்கும். கேரட் மற்றும் இஞ்சி இரண்டும் மிகவும் வித்தியாசமான சுவை கொண்ட பொருட்கள், ஆனால் ஒன்றாக சமைக்கும்போது, அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தையும் அளிக்கும்.

இந்த சூப்பின் செய்முறையை சமைக்க எளிதானது மற்றும் இதை செய்வதற்கு சில அடிப்படை சமையலறை பொருட்கள் மட்டுமே தேவை. பனிபொழியும் இந்த காலகட்டத்தில் சூடாக, சுவையாக மற்றும் ஆரோக்கியமாக ஏதாவது குடிக்க விரும்பினால் அதற்கு இந்த சூப் சரியான தேர்வாக இருக்கும். இந்த ஆரோக்கியமான சூப்பை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- 2 கப் கேரட்
- 2 கப் காய்கறி வேகவைத்த தண்ணீர்
- 1/2 கப் தேங்காய் பால்
- உப்பு தேவைக்கேற்ப
- கொத்தமல்லி இலைகள் - 1 கைப்பிடி
- 1 தேக்கரண்டி இஞ்சி
- 3 கப் தண்ணீர்
- 1 நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் கருப்பு மிளகு
செய்முறை:
- கேரட்டை பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். அவை மென்மையாக மாறியதும், தண்ணீரை வடிகட்டி, மீண்டும் பாத்திரத்தில் வைக்கவும்.
- அதே பாத்திரத்தில், காய்கறி வேகவைத்த தண்ணீரில் நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, தேங்காய் பால், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இந்த கலவையை மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் சமைக்கவும். சூப் நன்கு கொதித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, 30 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
- சூப் நன்கு கொதித்ததும், அதை முழுவதுமாக ஆற வைத்து, அதில் வேகவைத்த கேரட் துண்டுகளை சேர்த்து அரைக்கவும்.
- பரிமாறுவதற்கு முன் சூடாக்கி, சிறிது கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.



Click it and Unblock the Notifications