Latest Updates
-
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: நாவூறும்... ருசியான... ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை
Erode Pallipalayam Chicken Fry: இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு ஒரு ஸ்பெஷலான சிக்கன் ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை செய்து கொடுங்கள்.
இந்த ஈரோடு ஸ்பெஷல் ரெசிபி சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஈரோடு பள்ளிபாளையம் சிக்கன் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 12
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பூண்டு - 12 பற்கள்
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* பச்சை மிளகாய் - 3
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், பூண்டு,
கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு மூடி வைத்து, சிக்கனை 25-30 நிமிடம் குறைவான தீயில் வைத்து
வேக வைக்க வேண்டும். முக்கியமாக அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது
கிளறி விட வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், மூடியைத் திறந்து, தீயை அதிகரித்து சிக்கனை
பொன்னிறமாக ரோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான ஈரோடு பள்ளிபாளையம்
சிக்கன் ப்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











