Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சத்தான மற்றும் ருசியான... முருங்கைக்கீரை ராகி அடை
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி அடை செய்து கொடுங்கள்.
இன்று காலை உங்கள் வீட்டில் என்ன செய்தென்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சத்தான, அதே சமயம் சுவையான ஒரு ரெசிபியை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் ராகி அடை செய்து கொடுங்கள். அதுவும் அவல் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த அவலைப் பயன்படுத்தி, அத்துடன் ராகி மாவு, முருங்கைக்கீரை சேர்த்து ஒரு ருசியான முருங்கைக்கீரை ராகி அடையை செய்யுங்கள். இந்த அடைக்கு சைடு டிஷ் எதுவுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு முருங்கைக்கீரை ராகி அடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை ராகி அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளை அவல் - 1/2 கப்
* ராகி மாவு - 1 கப்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 1
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வெள்ளை அவலை நீரில் இரண்டு முறை அலசி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் கேரட்டை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த அவலை நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.
* பின்பு அதில் ராகி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகய், சீரகம், துருவிய கேரட், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் முருகைக்கீரையை நீரில் அலசிப் போட்டு நன்கு பிசைய வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அந்த மாவை கொஞ்சம் எடுத்து உருட்டிக் கொள்ள வேண்டும். பின் வாழை இலையில் எண்ணெயைத் தடவி, உருட்டிய உருண்டையை வைத்து, நீரைத் தொட்டு மெல்லிய தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், மிதமான தீயில் வைத்து, தட்டிய அடையை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான ராகி முருங்கைக்கீரை அடை தயார்.



Click it and Unblock the Notifications






