Latest Updates
-
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா? -
புதன் மிதுன ராசியில் வக்ரமடைவதால் இந்த 3 ராசிகளை தோல்விகளும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
இதுல உங்கள் விரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்.. -
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்!
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு சீனி பணியாரம்
தீபாவளிக்கு பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் வித்தியாசமான பலகாரங்களை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் செய்யுங்கள்.
தீபாவளிக்கு பலகாரங்களை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதுவும் வித்தியாசமான பலகாரங்களை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் சீனி பணியாரம் செய்யுங்கள். இது இனிப்பு சுவையுடன் அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு சீனி பணியாரம் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது.

ஏனென்றால், செட்டிநாடு சீனி பணியாரத்தின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த தீபாவளி ஸ்பெஷலாக வீட்டில் செய்து, உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
MOST READ: தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 1 கப்
* ஜவ்வரிசி - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* ஏலக்காய் - 2
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் ஜவ்வரிசியை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நன்கு கழுவி நீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு 1/4 கப் நீர் சேர்த்து, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை சேர்த்த பின் தண்ணீர் சேர்க்காதீர்கள். இல்லாவிட்டால் அதிக நீராகி நன்றாக வராமல் போய்விடும்.
* பின்பு அரைத்த மாவை ஒரு பௌலில் ஊற்றி, அதில் உப்பு சேர்த்து கிளறிவிடுங்கள். மாவானது தோவை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
* இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு (சற்று தாராளமாக) எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* அடுத்து ஒரு கரண்டி மாவு எடுத்து, எண்ணெயில் மெதுவாக ஊற்றுங்கள். பின் அதன் மேல் எண்ணெயை லேசாக ஊற்றிவிடுங்கள்.
* பணியாரத்தின் முனைகள் பென்னிறமாக மொறுமொவென்று மாறும் போது எடுங்கள். இப்படி மீதமுள்ள மாவை ஊற்றி எடுத்தால், சுவையான செட்டிநாடு சீனி பணியாரம் தயார்.



Click it and Unblock the Notifications