Just In
- 52 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 16 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 17 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- News
ஏன் சரத்குமார் இப்படி சொல்றாரு.. "அணி" உருவாகிறதாம்.. ஆனால் 3வது அணி கிடையாதாம்.. குழம்பும் கட்சிகள்
- Movies
தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்
- Automobiles
பெட்ரோல், டீசல் கார்களுக்கு முடிவு கட்ட திட்டம்... 2-வது எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது வால்வோ!
- Sports
பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தீபாவளி ஸ்பெஷல்: செட்டிநாடு உக்கரை
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. பலரும் வீடுகளில் தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள். தீபாவளி என்றாலே பலருக்கும் பட்டாசுக்கு அடுத்ததாக நினைவிற்கு வருவது, வீட்டில் செய்யும் பலகாரங்களாகத் தான் இருக்கும். இதுவரை தீபாவளிக்கு முறுக்கு, சீடை, அதிரசம், குலாப் ஜாமூன் போன்றவற்றைத் தான் செய்திருப்போம். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமான செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியை செய்து வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.
கீழே செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* ரவை - 1/8 கப்
* அரிசி மாவு - 1/8 கப்
* துருவிய தேங்காய் - 1/8 கப்
* ஏலக்காய் பொடி - 1/8 டீஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
* முந்திரி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப் + 1/2 கப்
வெல்லப் பாகு தயாரிக்க...
* வெல்லம் - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் அதில் பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, 2 கப் நீரை ஊற்றி, பாசிப்பருப்பை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* பாசிப்பருப்பு நன்கு வெந்ததும், அதை இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ரவையைப் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, பின் அரிசி மாவை போட்டு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் துருவிய தேங்காயைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள பாசிப் பருப்பைப் போட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
* இறுதியில் தயாரித்து வைத்துள்ள வெல்லப் பாகுவை வடிகட்டி ஊற்றி, நன்கு கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது, பாத்திரத்தில் ஒட்டாமல் இருந்தால், அதில் ஏலக்காய் பொடி, உப்பு மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கிளறினால், சுவையான செட்டிநாடு உக்கரை தயார்.