Just In
- 44 min ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 10 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Don't Miss
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா
நீங்கள் தாபா ஸ்டைல் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தாபா ஸ்டைல் உணவுகள் ஒரு தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். இதற்கு அதில் சேர்க்கப்படும் மசாலா தான் காரணம். நீங்கள் இந்த தாபா ஸ்டைல் ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை முயற்சி செய்யுங்கள். இந்த மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது விடுமுறை நாட்களில் செய்து சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தாபா மசாலாவிற்கு...
* மல்லி விதைகள் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/4 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பட்டை - 1/2 இன்ச்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* பன்னீர் - ஒரு கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* நெய்/வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
* நெய்/வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* உலர்ந்த வெந்தய கீரை/கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீரை ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாபா மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுத்து இறக்கி, குளிர்ந்ததும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தாபா மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து குறைவான தீயில் வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் உலர்ந்த வெந்தய கீரை, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா தயார்.
Image Courtesy: hebbarskitchen