Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
கறிவேப்பிலையை இப்படி சட்னி அரைச்சு சாப்பிட்டா முடியும் வளரும், எடையும் குறையுமாம்...எப்படி செய்யணும் தெரியுமா?
Curry Leaves Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய சமையலில் முதலில் போடப்படுவதும் சாப்பிடும்போது தூக்கி எறியப்படுவதும் கறிவேப்பிலைதான். பொதுவாக கறிவேப்பிலையை நாம் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் பொருள் மட்டுமே என்று நினைக்கிறோம், ஆனால் உண்மையில் கறிவேப்பிலை பல சத்துக்கள் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலையின் மற்றொரு முக்கிய நன்மை அது எடையை வேகமாக குறைக்க உதவும்.
ஆனால் பெரும்பாலான மக்கள் சாப்பிட அமர்ந்தவுடன் செய்யும் முதல் காரியம் கறிவேப்பிலையை தூக்கியெறிவதுதான். இதனால் நாம் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். இதைத் தவிர்க்க கறிவேப்பிலையை சுவையான சட்னியாக அரைத்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கறிவேப்பிலை சட்னி சாதத்துடன் பிணைந்து சாப்பிடுவதற்கும், இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை சட்னியை எப்படி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வரமிளகாய்
- புளி சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை கப் தேங்காய்
- பெருங்காயம் சிறிதளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- அரை ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
செய்முறை:
- கறிவேப்பிலையை நன்கு கழுவி விட்டு ஒரு துணியில் நன்கு பரப்பி காய
வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு,
உளுந்தம்பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பின்னர்
பெருங்காயத்தை சேர்க்கவும்.
- பருப்பு வெளிர் பொன்னிறமாக மாறியதும், வரமிளகாயைச் சேர்த்து, இரண்டு
பருப்பும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும், மிளகாய் மிருதுவாக
மாறும்வரை வதக்க வேண்டும்.
- அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை மற்றும் புளி சேர்க்கவும்.
கறிவேப்பிலை கடாயின் சூட்டில் சுருங்கும், இந்த கலவையை நன்கு
ஆறவிடவும்.
- கலவை குளிர்ந்த பிறகு, கலவையை மிக்சர் ஜாடிக்கு மாற்றவும்.
- தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் கரடு முரடாக அரைக்கவும்.
- பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
- சட்னியை அரைத்ததும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றவும். பின்னர் இதை நன்கு
கலந்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இதை சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக
இருக்கும்.



Click it and Unblock the Notifications