Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
கறிவேப்பிலையை இப்படி சட்னி அரைச்சு சாப்பிட்டா முடியும் வளரும், எடையும் குறையுமாம்...எப்படி செய்யணும் தெரியுமா?
Curry Leaves Chutney Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய சமையலில் முதலில் போடப்படுவதும் சாப்பிடும்போது தூக்கி எறியப்படுவதும் கறிவேப்பிலைதான். பொதுவாக கறிவேப்பிலையை நாம் முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் பொருள் மட்டுமே என்று நினைக்கிறோம், ஆனால் உண்மையில் கறிவேப்பிலை பல சத்துக்கள் நிறைந்த மூலிகையாகும். கறிவேப்பிலையின் மற்றொரு முக்கிய நன்மை அது எடையை வேகமாக குறைக்க உதவும்.
ஆனால் பெரும்பாலான மக்கள் சாப்பிட அமர்ந்தவுடன் செய்யும் முதல் காரியம் கறிவேப்பிலையை தூக்கியெறிவதுதான். இதனால் நாம் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களை இழக்கிறோம். இதைத் தவிர்க்க கறிவேப்பிலையை சுவையான சட்னியாக அரைத்து சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கறிவேப்பிலை சட்னி சாதத்துடன் பிணைந்து சாப்பிடுவதற்கும், இட்லி மற்றும் தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் சுவையான கறிவேப்பிலை சட்னியை எப்படி அரைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வரமிளகாய்
- புளி சிறிதளவு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை கப் தேங்காய்
- பெருங்காயம் சிறிதளவு
- தண்ணீர் தேவையான அளவு
தாளிக்க:
- அரை ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
செய்முறை:
- கறிவேப்பிலையை நன்கு கழுவி விட்டு ஒரு துணியில் நன்கு பரப்பி காய
வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பு,
உளுந்தம்பருப்பு சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பின்னர்
பெருங்காயத்தை சேர்க்கவும்.
- பருப்பு வெளிர் பொன்னிறமாக மாறியதும், வரமிளகாயைச் சேர்த்து, இரண்டு
பருப்பும் நன்கு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும், மிளகாய் மிருதுவாக
மாறும்வரை வதக்க வேண்டும்.
- அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலை மற்றும் புளி சேர்க்கவும்.
கறிவேப்பிலை கடாயின் சூட்டில் சுருங்கும், இந்த கலவையை நன்கு
ஆறவிடவும்.
- கலவை குளிர்ந்த பிறகு, கலவையை மிக்சர் ஜாடிக்கு மாற்றவும்.
- தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் கரடு முரடாக அரைக்கவும்.
- பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
- சட்னியை அரைத்ததும், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது ஊற்றவும். பின்னர் இதை நன்கு
கலந்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி.
- இதை சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக
இருக்கும்.



Click it and Unblock the Notifications