Latest Updates
-
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம்
3/4 கப் தயிர் இருந்தா அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க..
Curd Kara Chutney Recipe In Tamil: காலை வேளை வந்தாலே பெண்களுக்கு என்ன சமையல் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பதே ஒரு பெரிய வேலையாக உள்ளது. அதுவும் எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், இட்லி, தோசைக்கு என்ன சட்னியை இன்று செய்வது என்று முடிவெடுப்பது கடினமாக இருக்கும்.
நீங்கள் இன்று வீட்டில் இட்லி தோசை செய்யப்போகிறீர்கள் என்றால், அதற்கு வழக்கமாக செய்யும் சட்னியை செய்யாமல், 3/4 கப் தயிர் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இந்த தயிர் கார சட்னியை ஒருமுறை செய்தால், 2-3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அந்த அளவில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு தயிர் கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி தயிர் - 3/4 கப்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 12 பல் (அரைத்துக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் 3/4 கப் கெட்டித் தயிரை எடுத்து அதை நன்கு
அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கக வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
அரைத்து வைத்துள்ள பூண்டு மற்றும் 1 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து
நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, குறைவான தீயில் வைத்து நன்கு 1 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க
வைக்க வேண்டும்.
* இறுதியாக தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின் அதை அதில்
உள்ள நீர் வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
தயிர் கார சட்னி தயார்.
Image Courtesy: Chitra's Food Book



Click it and Unblock the Notifications











