Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
டயட்டில் இருப்போருக்கான... நோ ஆயில்.. க்ரீமி பன்னீர் கிரேவி... எப்படி செய்றது-ன்னு பாருங்க...
No Oil Creamy Paneer Gravy Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவில் புரோட்டீனை அதிகம் சேர்ப்பார்கள். அதுவும் பன்னீரை அதிகம் சேர்ப்பார்கள். அதோடு தங்களின் உணவில் எண்ணெயை சேர்ப்பதைத் தவிர்ப்பார்கள். இப்படி எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது என்று சவாலாக இருக்கலாம். சிலருக்கு எண்ணெய் சேர்க்காமல் எப்படி சமைப்பது என்ற கேள்வியும் எழலாம்.
ஆனால் பன்னீரைக் கொண்டு அருமையான சுவையில் கிரேவி செய்யலாம். அதுவும் க்ரீமியான பன்னீர் கிரேவியை செய்யலாம். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியில் எண்ணெய் மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு என்று எதுவுமே சேர்க்க வேண்டாம். எதுவும் சேர்க்காமலேயே அருமையான சுவையில் கிரேவி செய்யலாம்.

உங்களுக்கு எண்ணெய் சேர்க்காமல் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் சேர்க்காத பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 1 கையளவு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் 1 கையளவு முந்திரியை நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய 2 தக்காளி மற்றும் ஊற வைத்த
முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில்1 டீஸ்பூன் மிளகாய் தூள், 3/4 டீஸ்பூன் மல்லித்
தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதற்கு சற்று நேரம் எடுக்கும்,
இருந்தாலும், குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை 1/2 கப் ஊற்றி கிளறி கொதி வந்ததும்,
பன்னீர் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடம் வேக வைத்து, கசூரி மெத்தியை
மேலே தூவி கிளறி இறக்கினால், சுவையான க்ரீமி பன்னீர் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











