Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
1 கப் அரிசி மாவு இருந்தா இந்த ஆந்திரா ஸ்பெஷல் தேங்காய் வடை சுடுங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Coconut Vada Recipe in Tamil: நம் அனைவருக்குமே மிகவும் விருப்பமான மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத்தான் தேடும். மாலை மட்டுமல்ல காலையும் வடைதான் நம்முடைய பிரதான விருப்பமாக இருக்கும். வழக்கமாக உளுந்த வடை அல்லது பருப்பு வடை போன்றவற்றைதான் சாப்பிடுவோம்.
தமிழ்நாட்டை தாண்டி விட்டால் நாம் பலவகையான வடைகளை சுவைக்கலாம். அப்படி ஆந்திராவை சேர்ந்த ஒரு ஸ்பெஷல் வடைதான் தேங்காய் வடை. இந்த வடை கடினமானதாக இருக்காது. இது வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே கொஞ்சம் மென்மையாகவும் இருக்கும். இந்த வடை 2 நாட்கள் வரை ப்ரெஷாக இருக்கும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் சூப்பரான தேங்காய் வடையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவயானைப் பொருட்கள்:
- 1 கப் அரிசி மாவு
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 அங்குல இஞ்சி
- 1 தேக்கரண்டி சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- சூடான தண்ணீர் தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
- இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில் துருவிய தேங்காய், உப்பு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கிளறவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரைச் சேர்த்து, முதலில் ஒரு கரண்டியால் கலந்து, பின்னர் பூரி மாவைப் போல இறுக்கமான மாவாக கைகளால் பிசையவும்.
- ஒரு பாலிதீன் தாளில் 2-3 சொட்டு எண்ணெயை ஊற்றி, உங்கள் கையில் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, முறுக்கு போல தட்டையாக உருட்டவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்த மாவை மெதுவாக போட்டு வறுக்கவும்.
- இருபக்கமும் பொன்னிறமாக மாறியதும் அதை ஓரமாக வைக்கவும். ஆறியவுடன் காரமான தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பரான தேங்காய் வடை ரெடி!



Click it and Unblock the Notifications










