Latest Updates
-
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்!
1 கப் அரிசி மாவு இருந்தா இந்த ஆந்திரா ஸ்பெஷல் தேங்காய் வடை சுடுங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Coconut Vada Recipe in Tamil: நம் அனைவருக்குமே மிகவும் விருப்பமான மாலை நேர சிற்றுண்டிகளில் ஒன்று வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத்தான் தேடும். மாலை மட்டுமல்ல காலையும் வடைதான் நம்முடைய பிரதான விருப்பமாக இருக்கும். வழக்கமாக உளுந்த வடை அல்லது பருப்பு வடை போன்றவற்றைதான் சாப்பிடுவோம்.
தமிழ்நாட்டை தாண்டி விட்டால் நாம் பலவகையான வடைகளை சுவைக்கலாம். அப்படி ஆந்திராவை சேர்ந்த ஒரு ஸ்பெஷல் வடைதான் தேங்காய் வடை. இந்த வடை கடினமானதாக இருக்காது. இது வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே கொஞ்சம் மென்மையாகவும் இருக்கும். இந்த வடை 2 நாட்கள் வரை ப்ரெஷாக இருக்கும். இந்த ஆந்திரா ஸ்பெஷல் சூப்பரான தேங்காய் வடையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவயானைப் பொருட்கள்:
- 1 கப் அரிசி மாவு
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1/2 அங்குல இஞ்சி
- 1 தேக்கரண்டி சீரகம்
- 4 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- சூடான தண்ணீர் தேவைக்கேற்ப
- பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை:
- இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் அரிசி மாவில் துருவிய தேங்காய், உப்பு மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரைத்து வைத்த பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து கிளறவும்.
- கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரைச் சேர்த்து, முதலில் ஒரு கரண்டியால் கலந்து, பின்னர் பூரி மாவைப் போல இறுக்கமான மாவாக கைகளால் பிசையவும்.
- ஒரு பாலிதீன் தாளில் 2-3 சொட்டு எண்ணெயை ஊற்றி, உங்கள் கையில் எண்ணெயை தேய்த்துக் கொண்டு, முறுக்கு போல தட்டையாக உருட்டவும்.
- பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் தேய்த்து வைத்த மாவை மெதுவாக போட்டு வறுக்கவும்.
- இருபக்கமும் பொன்னிறமாக மாறியதும் அதை ஓரமாக வைக்கவும். ஆறியவுடன் காரமான தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பரான தேங்காய் வடை ரெடி!



Click it and Unblock the Notifications











