Just In
- 9 min ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
Don't Miss
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ருசியான... சில்லி பன்னீர்
மாலை வேளையில் மழைப் பெய்யும் போது, நன்கு சூடாக, காரமாக அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால், சில்லி பன்னீர் செய்து சுவையுங்கள்.
பால் பொருட்களுள் ஒன்றான பன்னீரில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் எலும்புகள் வலிமையுடனும் இருக்கும். அதற்கு பன்னீரை பலவாறு சமைத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு மாலை வேளையில் மழைப் பெய்யும் போது, நன்கு சூடாக, காரமாக அதே சமயம் சுவையான ஒரு ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட நினைத்தால், சில்லி பன்னீர் செய்து சுவையுங்கள். இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபி.
MOST READ: மொறுமொறுப்பான... பன்னீர் நக்கட்ஸ்
உங்களுக்கு சில்லி பன்னீர் ரெசிபியை எப்படி செய்தென்று தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். அதைப் படித்து செய்து சுவைத்து, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன்/கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
* பின் அதில் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் டோஸ்ட் செய்து வைத்துள்ள பன்னீரைப் போட்டு ஒருமுறை கிளறி விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லி அல்லது ஸ்பிரிங் ஆனியனைத் தூவினால், சில்லி பன்னீர் ரெடி!