முகலாய ராஜாக்களுக்கு பிடித்த சிக்கன் அக்பரி ரெசிபி... இதை செஞ்சு உங்க வீட்லயும் ராஜ விருந்து ரெடி பண்ணுங்க...!

Posted By:

Chicken Akbari Recipe in Tamil: இந்தியாவை 300 ஆண்டு காலம் ஆட்சி செய்த முகலாய வம்சம் இந்திய கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, உணவுமுறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக இருக்கும் பிரியாணி முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.

முகலாய உணவு வகைகள் இந்தியாவிற்கு பல்வேறு வகையான அரச உணவு வகைகளை வழங்கியுள்ளன, ஆனால் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட உணவு வகைகளின் ஒரு பகுதியாக இருந்த பல உணவுகளையும் இது தழுவியுள்ளது.

Chicken Akbari Recipe How to Prepare Chicken Akbari

பெரும்பாலான முகலாய ஆட்சியாளர்கள் பெரிய உணவுப் பிரியர்களாக இருந்தனர், மேலும் புதுப்புது உணவுகளை முயற்சிக்க விரும்பினர். சிக்கன் அக்பரி அப்படி அவர்கள் உருவாக்கிய உணவுகளில் ஒன்றுதான். இந்த உணவு முகலாயப் பேரரசர் அக்பருக்கு மிகவும் பிடித்திருந்ததால் இதற்கு சிக்கன் அக்பரி என்று பெயரிடப்பட்டது.

இந்த உணவைத் தயாரிப்பது மிகவும் கடினம் அல்ல, இந்த செயல்முறை அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், அதன் சுவை உண்மையிலேயே மதிப்புக்குரியவை. இந்த உணவை சமைப்பதில் மேரினேட் செய்வதும் மற்றும் உணவு சமைக்கப்படும் வரை குறைந்த தீயில் வேக வைப்பதும் முக்கியமானதாகும். அப்போதுதான் அனைத்து சுவைகளும் ஒன்றிணைந்து சுவையான சிக்கனை உருவாக்கும். இந்த பதிவில் முகலாய அரசவையை அலங்கரித்த அக்பரி சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

MOST READ:தெருவே மணக்கும் காரைக்குடி சிக்கன் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... அட்டகாசமா இருக்கும்...!

தேவையானப் பொருட்கள்:

- அரை கிலோ சிக்கன்
- 2 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 கப் தயிர்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
- 50 கிராம் முந்திரி
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
- 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
- 1/2 கப் நறுக்கிய தக்காளி
- ஒன்றரை ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள்
- 2 பச்சை ஏலக்காய்
- 50 கிராம் தேங்காய்
- 2 ஸ்பூன் மல்லித்தூள்
- 2 ஸ்பூன் நெய்
- உப்பு தேவையான அளவு

செய்முறை:

- முதலில் சிக்கனை நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

- இப்போது ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். பின்னர் இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து 40 விநாடிகள் எண்ணெயில் வறுக்கவும்.

- பின்னர் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அவை கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் இஞ்சி-பூண்டு விழுது மற்றும் இறுதியாக நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தக்காளி விரைவாக வதங்க சிறிது உப்பு சேர்க்கவும்.

- தக்காளி குலைந்ததும் சிக்கனை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து, நன்கு கிளறி, சிக்கனில் நன்கு சேரும்படி வதக்கவும். இப்போது தயிரை சேர்த்து மூடி வைக்கவும்.

- சிக்கன் வெந்து கொண்டிருக்கும் போதே முந்திரி பருப்பை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

- சிக்கனிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், இந்த விழுதையும், ½ கப் தண்ணீரையும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்கு கிளறவும். மூடி வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும்.

- சிக்கன் அக்பரியை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன், 1/2 டீஸ்பூன் கசூரி மேத்தியை நன்கு தேய்த்து சேர்த்தால் கூடுதல் வாசனையுடன் இருக்கும்.

- ராஜ உணவான சிக்கன் அக்பரி ரெடி. சப்பாத்தி மற்றும் தோசையுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

[ of 5 - Users]
Desktop Bottom Promotion