Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு இந்த செட்டிநாடு தக்காளி சட்னியை ஒருதடவை அரைச்சு பாருங்க... சுருக்குனு சூப்பரா இருக்கும்...!
Chettinad Tomato Kara Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அதிகம் செய்வீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் கார சட்னியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு ஸ்டைல் தக்காளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் வெங்காயம்
- 4 பழுத்த தக்காளி
- 4 வர மிளகாய்
- 3 காஷ்மீர் சிவப்பு மிளகாய்
- 5 பூண்டு பல்.
- 2 இன்ச் புளி
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் வெல்லம்
- 4 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- - எண்ணெய் சூடானதும் அதில் கடலைப் பருப்பு, வர மிளகாய், புளி ஆகியவற்றைப் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
- அதே எண்ணெயில், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும். இந்த கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக குழைந்து மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை அறை வெப்பநிலையில் குளிர வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய மிளகாய், கடலைப் பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் இதனுடன் வதக்கிய வெங்காயம், பூண்டு கலவையைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications











