Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இட்லி, தோசைக்கு இந்த செட்டிநாடு தக்காளி சட்னியை ஒருதடவை அரைச்சு பாருங்க... சுருக்குனு சூப்பரா இருக்கும்...!
Chettinad Tomato Kara Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலை வேளையில் எப்போதும் இட்லி, தோசை தான் டிபனாக இருக்குமா? இந்த இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னியை தான் சைடு டிஷ்ஷாக அதிகம் செய்வீர்களா? குறிப்பாக சட்னி என்றால் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னியை அதிகம் செய்வீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு கார சட்னி பிடிக்குமானால், எப்போதும் ஒரே சுவையில் கார சட்னியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு ஸ்டைல் தக்காளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைல் சட்னியை செய்தால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செட்டிநாடு தக்காளி கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கப் வெங்காயம்
- 4 பழுத்த தக்காளி
- 4 வர மிளகாய்
- 3 காஷ்மீர் சிவப்பு மிளகாய்
- 5 பூண்டு பல்.
- 2 இன்ச் புளி
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் வெல்லம்
- 4 ஸ்பூன் கடலைப் பருப்பு
- 2 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- - எண்ணெய் சூடானதும் அதில் கடலைப் பருப்பு, வர மிளகாய், புளி ஆகியவற்றைப் பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்
- அதே எண்ணெயில், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பல் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும். இந்த கட்டத்தில் உப்பு சேர்த்து வதக்கவும்
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, தக்காளி நன்றாக குழைந்து மென்மையாகும் வரை வதக்கவும்.
- இந்த கலவையை அறை வெப்பநிலையில் குளிர வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய மிளகாய், கடலைப் பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- பின்னர் இதனுடன் வதக்கிய வெங்காயம், பூண்டு கலவையைச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- பின்னர் வதக்கிய தக்காளி மற்றும் வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் சுவையான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications