Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மணமணக்கும்.. செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு
Chettinad Style Potato Brinjal Kara Kuzhambu: ஒவ்வொரு நாளும் என்ன சமையல் செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்களா?
உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு செய்யுங்கள்.

இந்த கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 1/4 கப்
குழம்பிற்கு...
* சின்ன வெங்காயம் - 1/2 கப்
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* கத்திரிக்காய் - 2 (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு - 1 கப்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மல்லி
விதை, சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்கி
இறக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2
கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காயை சேர்த்து கிளறி,
புளிச்சாறு, சாம்பார் பவுடர், வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூட்னதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் குக்கரில் உள்ள விசில் போதும், குக்கரைத் திறந்து, அதில்
அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து, 3-4
நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, தாளித்ததை சேர்த்து கிளறினால்,
சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











