Latest Updates
-
மனிதர்களை மீண்டும் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: இதன் அறிகுறிகள் என்ன? இந்தியாவிற்கு இதனால் ஆபத்து உள்ளதா? -
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்! -
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா? -
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்
சப்பாத்திக்கு அடுத்தமுறை பன்னீரை இந்த மாதிரி மசாலா செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..
Chettinad Pepper Paneer Masala: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் கேட்கிறார்களா? நீங்கள் எப்போதும் பன்னீரை ஒரே மாதிரி தான் சமைப்பீர்களா?
அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான, அதே சமயம் சளி பிடித்திருந்தால் அந்த சளி சரியாகும் படியான நல்ல காரசாரமான செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலாவை செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 3/4 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* ஜாவித்திரி -1
* பட்டை - 1 இன்ச்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தக்ககாளி - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 3 கப்
* பன்னீர் - 250 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், மல்லி, மிளகு, அன்னாசிப்பூ,
பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், ஜாவித்திரி, பட்டை, வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் வைத்து நல்ல மணம் வரும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது செட்டிநாடு
மசாலா தயார்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு நிறம் மாறும்
வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலாவை சேர்த்து,
எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 3 கப் நீரை ஊற்றி கிளறி நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 10
நிமிடம் வேக வைத்து, மேலே சிறிது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத்
தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு பெப்பர் பன்னீர் மசாலா
தயார்.
Image Courtesy: hebbarskitchen



Click it and Unblock the Notifications











