Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
செட்டிநாடு பெப்பர் காளான் ரெசிபி... இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பாரை விட இது பக்காவாக இருக்கும்..ட்ரை பண்ணுங்க!
Chettinad Mushroom Pepper Masala Recipe in Tamil: செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுவையான உணவுகள்தான். செட்டிநாடு உணவுகள் என்றாலே அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக உள்ளது. இப்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியம், ஆரோக்கியமான உணவுகள் சுவையாகவும் இருப்பது கூடுதல் நன்மையாகும்.
சிக்கன், மட்டனுக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருள் என்றால் அது காளான்தான். பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த காளானை செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்துடன் சுவையையும் கொடுக்கும். இந்த செட்டிநாடு காளான் மிளகு மசாலா இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்திற்கும் கூட பக்காவாக இருக்கும். இந்த சூப்பரான செட்டிநாட்டு காளான்மிளகு மசாலாவை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
- காளான் - 200 கிராம்
- பெரிய வெங்காயம் - 1
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் 50 மில்லி
அரைப்பதற்கு:
- தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- மல்லி விதை - 2 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- மிளகு - 2 ஸ்பூன்
- ஏலக்காய் - 2
- அன்னாசிப்பூ - 1
- பட்டை - 2
- கிராம்பு 2
வதக்கி அரைக்க:
- சின்னவெங்காயம் - 10 முதல் 15
- தக்காளி - 2
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 10 பல்
செய்முறை:
- முதலில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்
- பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.
- மசாலாவை செய்ய கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு அதன்பின் நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
- தக்காளி, வெங்காயத்தின் பச்சை வாசனை போனவுடன் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்க்கவும்.
- அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும் நன்கு கொதிக்க விடவும். மசாலா நன்கு வந்ததும் நறுக்கி வைத்த காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான செட்டிநாடு மஷ்ரூம் கிரேவி தயார். இது மழை நேரத்தில் இட்லி, தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications