Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
ஈஸியான... செட்டிநாடு இறால் குழம்பு
பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார விடுமுறையில் இறாலைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைல் குழம்பு செய்யுங்கள்.
பொதுவாக விடுமுறை நாட்களில் பிடித்த அசைவ உணவை சமைத்து சாப்பிடுவோம். நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார விடுமுறையில் இறாலைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைல் குழம்பு செய்யுங்கள். இந்த செட்டிநாடு இறால் குழம்பு செய்வது மிகவும் சுலபம். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். நீங்கள் செட்டிநாடு ரெசிபி பிரியர் என்றால், இந்த வாரம் இதை முயற்சித்துப் பாருங்கள்.

உங்களுக்கு செட்டிநாடு இறால் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இறால் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இறால் - 500 கிராம் (சுத்தம் செய்தது)
வறுத்து அரைப்பதற்கு...
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2-3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* மிளகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 4
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
குழம்பிற்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கையளவு
* சின்ன வெங்காயம் - 20 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த பொடியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலா பொடிகளை சேர்த்து, அத்துடன் அரைத்த மசாலா பொடியையும் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் புளிச்சாறு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கழுவிய இறாலை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications