Latest Updates
-
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம்
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த மாதிரி வடகறி செஞ்சு பாருங்க.. சும்மா டேஸ்ட் அள்ளும்...
Chennai Special Vada Curry Recipe In Tamil: இட்லி, தோசைக்கு எப்போதும் சாம்பார், சட்னி செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சற்று வித்தியாசமாகவும், அவர்களை அசத்தும் வகையிலும் ஒரு சைடு டிஷ் செய்து கொடுக்க நினைத்தால், சென்னை ஸ்பெஷல் வடகறியை செய்யுங்கள்.
இந்த வடகறி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி செய்தால் 20 நிமிடத்தில் செய்துவிடலாம். அந்த அளவில் இது மிகவும் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சென்னை ஸ்பெஷல் வடகறி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சென்னை ஸ்பெஷல் வடகறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலைப் பருப்பு - 200 கிராம்
* வரமிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 4 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக்கப்பட்டது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
* கொத்தல்லி - 1 கைப்பிடி
* தண்ணீர் - 4 கப்
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் கடலைப் பருப்பைக் கழுவிப் போட்டு, அத்துடன்
வரமிளகாய், சிறிது உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் 2
டீஸ்பூன் ஊற்றி, அரைத்து வைத்துள்ளதை அடை போன்று தட்டி, அப்படியே
கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* அடை குளிர்ந்ததும், அதை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கய வெங்காயம், சுவைக்கேற்ப உப்பு மற்றும்
பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள்,
சோம்பு தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியைத் தூவி 1 நிமிடம் கிளறி,
4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் உதிர்த்து வைத்துள்ளதை சேர்த்து கிளறி, குக்கரை மூடி
1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சிறிது கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான சென்னை ஸ்டைல் வடகறி தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications