Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பெங்காலி லுச்சி
வீட்டில் கோதுமை மாவு இல்லையா? மைதா மாவு உள்ளதா? அப்படியெனில் அந்த மைதாவைக் கொண்டு பெங்காலி லுச்சி செய்யுங்கள். லுச்சி என்பதும் பூரியைப் போன்றது தான்.
இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? ஆனால் வீட்டில் கோதுமை மாவு இல்லையா? மைதா மாவு உள்ளதா? அப்படியெனில் அந்த மைதாவைக் கொண்டு பெங்காலி லுச்சி செய்யுங்கள். லுச்சி என்பதும் பூரியைப் போன்றது தான். ஆனால் லுச்சி என்பது வெள்ளை நிறத்தில் மைதாவில் நெய் அதிகம் சேர்த்து பிசைந்து செய்யப்படும் பூரி ஆகும். இந்த லுச்சி மிகவும் சுவையாக இருக்கும். இந்த லுச்சியை தால், சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு கிரேவி என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பெங்காலி லுச்சி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி லுச்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்/ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரைத் தெளித்து, கையால் நன்கு பிசைய வேண்டும்.
* பின்பு மெதுவாக நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை பிசைய வேண்டும். மாவானது கையில் ஒட்டக்கூடாது.
* பிறகு பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அந்த உருண்டைகளை எண்ணெய் பயன்படுத்தி பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து முன்னும் பின்னும் வெள்ளை நிறம் மாறாமல் வேக வைத்து எடுத்தால், பெங்காலி லுச்சி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












