10 நிமிசத்தில் பருப்பே இல்லாமல் செய்யக்கூடிய பேச்சுலர் சாம்பார் ரெசிபி... செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்...!

Posted By:

Bachelor Sambar Recipe in Tamil: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சைடிஷ் என்றால் அது சாம்பர்தான். சாம்பாரையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சாதமாக இருந்தாலும் சரி, இட்லி, தோசையாக இருந்தாலும் சரி சாம்பார் இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. சாம்பார் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் விருப்பமான உணவாக இருக்கிறது. சாம்பார் பொதுவானதாக இருந்தாலும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் சாம்பார் செய்வதற்கென தனிப்பட்ட வழிமுறைகள் உள்ளது.

தமிழ்நாட்டிலேயே பலவகை சாம்பார் உள்ளது. காரைக்குடி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், கும்பகோணம் சாம்பார் என பலவகை சாம்பார்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு சாம்பாரும் ஒரு விதத்தில் தனித்துவமானது. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது பேச்சுலர் சாம்பார். தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்கள் மிகவும் எளிதில் 15 நிமிடத்தில் செய்யக்கூடியதாக இருப்பதால் இது பேச்சுலர் சாம்பார் என்று அழைக்கப்படுகிறது.

Bachelor Sambar Recipe How to Make Bachelor Sambar

வீட்டில் வைப்பது போல நீண்ட நேரம் தேவைப்படும் சாம்பார் வைக்காமல் இதுபோல வித்தியாசமன மற்றும் எளிமையான சாம்பார் வைப்பது தனியாக இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் தனியாக இருப்பவர்கள் எளிதாக செய்யக்கூடிய மற்றும் சாதத்துக்கு வேற லெவலில் இருக்கும் சுவையான பேச்சுலர் சாம்பாரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நீளமாக கீறிய பச்சை மிளகாய - 1
- நறுக்கிய தக்காளி - 2
- சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

- பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும்.

- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.

- பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

- கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சூப்பரான பேச்சுலர் சாம்பார் தயார்.

- இது சாதத்தில் ஊற்றி சாப்பிடவும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 3, 2025, 16:31 [IST]
Desktop Bottom Promotion