Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
1 கப் அவலும், கொஞ்சம் தயிரும் இருந்தா 10 நிமிசத்துல இந்த மாதிரி வடை செய்யுங்க... மொறுமொறுனு செமையா இருக்கும்!
Aval Vadai Recipe in Tamil: நமக்கு மிகவும் பிடித்த அதுவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். டீக்கடைக்கு சென்றாலே நம் கண்களும், கைகளும் வடையை நோக்கித்தான் செல்லும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு உணவாக மாறிவிட்டது. பொதுவாக வடை என்றால் அது உளுந்த வடை அல்லது பருப்பு வடைதான். ஆனால் எந்த பருப்பும் இல்லாமலேயே ஒரு சுவையான வடையை செய்து விடலாம்.
முக்கியமாக இந்த வடையை செய்வதற்கு நீங்கள் பருப்பை ஊறவைத்து விட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சில நிமிடங்களில் இந்த சுவையான வடையை செய்து விடலாம். இந்த வடையை செய்வதற்கு உங்கள் வீட்டில் அவலும், தயிரும் இருந்தால் போதுமானது. ஒரு தடவை இந்த வடையை செய்து விட்டால் அதன்பின் அடிக்கடி இந்த வடையை செய்ய நீங்களே விரும்புவீர்கள். இந்த வடை அந்த அளவிற்க்கு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு அவலை வைத்து எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- ¼ கப் தயிர்
- 2 பச்சை மிளகாய்
- ஒரு சிறிய துண்டு இஞ்சி
- 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
- ¼ கப் துருவிய கேரட்
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- அவலைக் கழுவி, ஒரு வடிகட்டியை வைத்து தண்ணீரை வடிய விடவும்.
- தண்ணீர் நன்றாக வடிந்ததும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அதில் ¼ கப் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 15 நிமிடங்கள் மூடி வைத்து ஊற விடவும்.
- பிறகு மூடியை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும்.
- ஒருவேளை நீங்கள் வெங்காயம் சேர்க்க விரும்பினால் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும்.
- இப்போது அரிசி மாவு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். தேவைப்பட்டால், 1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் தெளித்து, கெட்டியான மாவாகப் பிசையவும்.
- உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, மாவில் இருந்து ஒரு சிறிய பகுதியை எடுக்கவும். வடை போல கைகளில் தட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் வடையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
- ஒரு டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் வடிந்ததும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications











