Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தோசைக்கு மாவு அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரையுங்க... தோசை மல்லிகைப்பூ மாதிரி மென்மையா இருக்கும்!
Aval Dosa Recipe in Tamil: தோசை நமது பிரதான உணவுகளில் ஒன்றாகும். காலையோ அல்லது மாலையோ நிச்சயம் வாரத்திற்கு 3 முறையாவது நாம் தோசை சாப்பிட்டு விடுவோம். சிலர் வாரம் முழுக்கவே தோசை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தோசைகள் பொதுவாக புளித்த அரிசி மற்றும் பருப்பு மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஆனால் சில வகையான தோசைகளை நாம் உடனடியாக தயாரிக்கலாம்.
அந்த வகையில் மிகவும் எளிமையான மற்றும் சுவையான ஒரு தோசைதான் அவல் தோசை. இந்த அவல் தோசை காலை அல்லது இரவு உணவிற்கு ஏற்றது. இந்த தோசையை பிளைன் தோசையாக சாப்பிடலாம் அல்லது பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்து அடையாகவும் செய்து சாப்பிடலாம். இந்த மென்மையான பூ போன்ற தோசையை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 1 கப் அரிசி
- கால் கப் உளுந்தம் பருப்பு
- 1 கப் அவல்
- அரை கப் தயிர்
- உப்பு தேவைக்கேற்ப
- தண்ணீர் தேவைக்கேற்ற
- எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
- அவல் தோசை செய்யத் தொடங்குவதற்கு, அரிசி, உளுந்தம் பருப்பை தனித்தனியாக நீரில் கழுவவும்.
- பின்னர் இதை போதுமான தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அவலை அரை கப் தயிரில் சுமார் 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- அரிசி மற்றும் உளுந்தம் பருப்பு நன்கு ஊறியதும், அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து, ஊறவைத்த அவல் மற்றும் தயிருடன் சேர்த்து, மென்மையான மற்றும் அடர்த்தியான மாவாக அரைக்கவும். இந்த மாவை ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றவும்.
- அடுத்து உளுந்தம்பருப்பை மென்மையான மற்றும் அடர்த்தியான மாவு தயாரிக்க போதுமான தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இந்த மாவை அரிசி மற்றும் அவல் கலவையில் ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் பாத்திரத்தை மூடி, அவல் தோசை மாவை ஒரு சூடான இடத்தில் சுமார் 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் புளிக்க விடவும்.
- புளித்த பிறகு, மாவை நன்கு கிளறி, தோசை ஊற்றலாம். குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
- பின்னர் வழக்கம் போல தோசை ஊற்றுவது போல இதனை தோசைக்கல்லில் ஊற்றலாம். எண்ணெய்க்குப் பதிலாக நெய் பயன்படுத்தி ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும்.
- இந்த தோசை வழக்கமான தோசை போல இல்லாமல் மென்மையாக பூ போல இருக்கும்.
- இந்த தோசைக்கு காரமான தக்காளி அல்லது தேங்காய் சட்னி சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











