Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு கடையல் செய்ய தெரியுமா?
தக்காளி பப்பு அல்லது பருப்பு என வட மாநிலங்களில் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது ஒரு சிறப்பு தென்னிந்திய தால்.. ஆந்திர குஷான்களில் மிகவும் பிரபலமான இந்த உணவு. சைவ பிரியர்களுக்கான ஸ்பெஷல். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தினமும் உணவில் பருப்பு இருப்பதில்லை. ஆனால் அப்படி இருந்தால் அவர்களுக்கு அது பெரிய விருந்தாக இருக்கும்.. ஆம் இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....
தக்காளி பருப்பு மற்ற பருப்பு சமையல் குறிப்புகளுடன் தொடர்புடையது. ஆனால் தக்காளி பப்புவின் சுவை சற்று வித்தியாசமானது. இந்த தக்காளி பருப்பு செய்வது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம். பருப்பு செய்முறையை இரண்டு வழிகளில் தயாரிக்கலாம். அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு ஒரே நேரத்தில் சமைக்கவும். அல்லது பருப்பை மட்டும் இப்படி சமைத்து மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்க வேண்டும்... மேலும் இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்புவை நீங்களும் உங்க வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள்..

தேவையானவை:
பருப்பு: 1 கப்
தக்காளி: 3
வெங்காயம்: 1 (பெரியது பொடியாக நறுக்க வேண்டும்)
பூண்டு பல்: 3-4
பச்சை மிளகாய்: 2
உப்பு: ருசிக்கேற்ப
மஞ்சள்: சிட்டிகை
மிளகாய் : 1 டீஸ்பூன்
புளி : சிறிய நெல்லிக்காய்
கடுகு : 1 டீஸ்பூன்
சீரகம் : 1 டீஸ்பூன்
பெருங்காயம் : சிட்டிகை அளவு
வெந்தயப் பொடி : சிட்டிகை அளவு
கறிவேப்பிலை : சிறிது
நெய் : 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் : 2
செய்முறை:
1. முதலில், தக்காளி பழத்தை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. பிறகு துவரம் பருப்பைக் கழுவி பிரஷர் குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
3. பிறகு ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
4. வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகளைப் போட்டு சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கலக்கி விட வேண்டும்... தக்காளி துண்டுகள் மென்மையாகும் வரை நன்கு கலக்க வேண்டும்..
5. இப்போது குக்கரில் இருந்து ஆறிய பருப்பை எடுத்து நன்றாக மசித்து, அதை வேகவைத்த தக்காளியுடன் சேர்த்து கலக்கவும்.
6. பிறகு ஊறவைத்த புளியை எடுத்து அதனுடன் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும்.. பருப்பு கெட்டியான பிறகு, அதை எடுத்து தனியாக வைக்கவும்.
7. இப்போது மற்றொரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய்யை போட்டு வெந்ததும் ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை வெந்தய போடி, ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம், காய்ந்த மிளகாய் இரண்டு துண்டுகள், கறிவேப்பிலை போட்டு அது வெடித்ததும், தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான்... இப்போது சுவையான தக்காளி பப்பு தயார். இறுதியாக கொத்தமல்லி தழையால் அலங்கரித்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
8. இந்த ரசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.. அதிலும் இப்போது புரட்டாசி மாதம் ஆரபித்துள்ளது.. சைவம் மட்டுமே சாப்பிடும் இந்த நேரத்தில் இந்த பப்பு தக்காளியை செய்தால் போதும் வேறு ஏதும் தேவையில்லை.. அனைவரும்அமைதியாக சாப்பிட்டுவிடுவார்கள்.. அவ்வளவு ருசியாக இருக்கும்.. தேவைப்பட்டால் அதில் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்..



Click it and Unblock the Notifications
