Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி ரெசிபி...1 கப் கறிவேப்பிலையும், இஞ்சியும் இருந்தா இந்த சூப்பரான பச்சடி ரெடி!
Andhra Style Karuveppilai Pachadi Recipe in Tamil: இட்லி, தோசை செய்வது எவ்வளவு எளிதானதோ அதற்கு என்ன சட்னி செய்வது என்று சிந்திப்பது என்பது மிக மிக கடினமானது. இட்லி, தோசைக்கு வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவற்றைத்தான் பெரும்பாலும் செய்வோம். இது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். எனவே புதுப்புது சட்னிகள் செய்வது மிகவும் அவசியமானதாகும்.
இந்த நிலையில் ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி இட்லி, தோசைக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும். ஆந்திரா கறிவேப்பிலை பச்சடி என்பது கறிவேப்பிலை, இஞ்சி, வர மிளகாய் மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு சுவையான பச்சடியாகும். இந்த காரசாரமான கறிவேப்பிலை பச்சடியை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடனும் சேர்த்து சாப்பிடவும் அருமையாகவும் இருக்கும். ஆந்திர மக்கள் இந்த கறிவேப்பிலை பச்சடியை சூடான சாதத்தில் போட்டு அதில் நெய் ஊற்றி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 கப் கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 4 வர மிளகாய்
- 1 துண்டு இஞ்சி(நறுக்கியது)
- 1 கப் புளிச்சாறு
- 1 ஸ்பூன் கடுகு
- 1 வர மிளகாய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடியை செய்ய முதலில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடலைப் பருப்பு போட்டு வதக்கவும், பின்னர் வர மிளகாயை போட்டு வறுக்கவும்.
- வர மிளகாய் வதங்கியதும், கறிவேப்பிலையை போட்டு மொறுமொறுப்பாக வறுத்து, பின்னர் நறுக்கிய இஞ்சியைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- பின்னர் புளியில் நீரை ஊற்றி சிறிது நேரம் ஊற விடவும். இந்த கட்டத்தில் தீயைக் குறைத்து, கறிவேப்பிலையை நன்கு கிளறவும்.
- பின்னர் இதை ஆறவைத்து பின்னர் மிக்ஸி ஜாரில் கரைத்த புளிச்சாறை சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- பச்சடியை தழைக்க ஒரு சிறிய கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பின்னர் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் வர மிளகாயை சேர்த்து சட்னியின் மேல் கொட்டி கிளறினால் ஆந்திரா ஸ்டைல் கறிவேப்பிலை பச்சடி ரெடி.
- இந்த கறிவேப்பிலை பச்சடி இட்லி, தோசை மற்றும் சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications











