Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால்
கோடையில் கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால்.
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால். இந்த தால் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா பச்சை மாங்காய் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பச்சை மாங்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தால் செய்வதற்கு...
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மாங்காய் சமைப்பதற்கு...
* மாங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பற்கள்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் 2 கப் நீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு மத்து அல்லது கரண்டியால் பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மாங்காயை சமைப்பதற்கு, குக்கரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 1/2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டுகளை தட்டிப் போட்டு, லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள மாங்காய் மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா பச்சை மாங்காய் தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications