Latest Updates
-
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
ஆந்திரா ஸ்பெஷல் பச்சை மாங்காய் தால்
கோடையில் கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால்.
கோடைக்காலத்தில் மாங்காய் சீசன் என்பதால், எங்கு பார்த்தாலும் மாங்காய் விலைக் குறைவில் கிடைப்பதைக் காண்போம். அப்படி கிடைக்கும் மாங்காயைக் கொண்டு பல ரெசிபிக்களைத் தயாரித்து சுவைக்கலாம். அதுவும் மாங்காய் கொண்டு அட்டகாசமான சுவையில் ஆந்திரா ரெசிபியை செய்யலாம். அது தான் பச்சை மாங்காய் தால். இந்த தால் மதிய வேளையில் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா பச்சை மாங்காய் தால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பச்சை மாங்காய் தால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தால் செய்வதற்கு...
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* துவரம் பருப்பு - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மாங்காய் சமைப்பதற்கு...
* மாங்காய் - 1 (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 2 பற்கள்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் ஒரு குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அத்துடன் 2 கப் நீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு மத்து அல்லது கரண்டியால் பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மாங்காயை சமைப்பதற்கு, குக்கரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் 1/2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பூண்டுகளை தட்டிப் போட்டு, லேசாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள மாங்காய் மற்றும் துவரம் பருப்பை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா பச்சை மாங்காய் தால் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications