Latest Updates
-
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா?
இட்லி, தோசைக்கு ஒருமுறை கார சட்னியை இப்படி செஞ்சு பாருங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Andhra Kara Chutney Recipe In Tamil: காலையில் வீட்டில் இட்லி அல்லது தோசை தான் செய்யப் போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக கார சட்னி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று கார சட்னியை செய்யாமல், ஒருமுறை கார சட்னியை ஆந்திரா ஸ்டைலில் செய்து பாருங்கள். இந்த கார சட்னி நன்கு காரமாகவும், புளிப்பாகவும் இருப்பதால், 2 இட்லி அல்லது தோசையை சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் ஈஸி.
உங்களுக்கு ஆந்திரா கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5-6
* பெரிய வெங்காயம் - 2
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு (நீரில் 10 நிமிடம் ஊறு வைத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் புளியை சிறிது நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஒரு தட்டில்
வறுத்த பொருட்களை எடுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் வெங்காயம் மற்றும் பூண்டு
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புக்களை மற்றும் வரமிளகாய்
சேர்த்து நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் வதக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
மற்றும் ஊற வைத்துள்ள புளித் துண்டையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி,
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா கார சட்னி
தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications