Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...!
Andhra Egg Curry Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை புலுசுவை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக தோன்றும். மேலும் இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம்.
இந்த கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி தோசை, புரோட்டா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த முட்டைக் குழம்பு வழக்கமான முட்டைக்குழம்பு போல இருக்காது, இதன் செய்முறையே கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். ஒருமுறை இந்த முட்டை புலுசுவை செய்து விட்டால் அதன்பிறகு அடிக்கடி இதைத்தான் செய்வார்கள். ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலும் இது மிகவும் பிரபலமானதாகும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் முட்டை புலுசுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் முட்டை புலுசு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 பச்சை மிளகாய்
- 4 வேகவைத்த முட்டைகள்
- 1/4 ஸ்பூன் உப்பு
- 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
குழம்பு வைக்க:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 1/2 ஸ்பூன் கடுகு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 2 வர மிளகாய்
- 4 பச்சை மிளகாய்
- 2 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 1 கப் நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் உப்பு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 தேக்கரண்டி தனியா தூள்
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா
- 1 நெல்லிக்காய் அளவு புளி
- 2 கப் தண்ணீர்
- 1/4 ஸ்பூன் சர்க்கரை
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
செய்முறை:
- முதலில் முட்டையை வேக வைத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு முட்கரண்டியை எடுத்து, வேகவைத்த முட்டைகளின் மேல் துளைகளைப் போடவும். அப்போதுதான் மசாலா முட்டைக்குள் நன்றாக இறங்கும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். பின்னர் துளையிட்ட முட்டைகளையும் உப்பையும் சேர்க்கவும்.
- முட்டைகளைச் சேர்த்த பிறகு, ஒரு நிமிடம் அப்படியே காத்திருக்கவும். முட்டைகளின் வெளிப்பகுதி பொன்னிறமாக மாறி, மொறுமொறுப்பாகும் வரை அப்படியே விடவும்.
- ஒரு நிமிடம் கழித்து முட்டைகளைத் திருப்பிப் போட்டு, அனைத்துப் பக்கங்களும் லேசாக மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். பின்னர் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் வறுக்கவும். வறுத்த முட்டைகளை ஒரு தட்டிற்கு மாற்றி, தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில், இன்னும் சிறிது எண்ணெய் சேர்க்கவும். வெந்தயத்தைச் சேர்க்கவும். பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகி மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் நறுக்கிய தக்காளியையும் உப்பையும் சேர்க்கவும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்றாக கலக்கவும்.
- பாத்திரத்தை மூடி, குழம்பை மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- பின் மசாலாப் பொடிகளைச் சேர்த்து, கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
- குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போது புளியை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளியைப் பிழிந்து அதன் சாற்றை எடுக்கவும்.
- பின்னர் கொதிக்கும் குழம்பில் புளிச்சாறு மற்றும் தண்ணீரைச் சேர்க்கவும். அதன்பின் சர்க்கரையைச் சேர்த்து, அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கலக்குமாறு நன்கு கிளறவும். சர்க்கரை சேர்ப்பது குழம்பின் சுவையை சமநிலைப்படுத்த உதவும். குழம்பை சில நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- பின் வேகவைத்த முட்டைகளைச் சேர்த்து குழம்புடன் நன்றாக கலக்கவும். முட்டைகளைச் சேர்த்த பிறகு, நீண்ட நேரம் சமைக்க வேண்டாம். இறுதியாக, தாராளமாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளை, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் முட்டை புலுசு ரெடி!



Click it and Unblock the Notifications