Latest Updates
-
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை
இட்லி, இடியாப்பத்துக்கு அட்டகாசமா இருக்கும் ஆட்டுக்கால் பாயா... எப்படி செய்யணும் தெரியுமா?
Aatu Kaal Paya Recipe In Tamil: விடுமுறை நாட்கள் வந்தாலே அனைவரும் தங்கள் வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். அதுவும் காலை முதல் இரவு வரை மூன்று வேளையும் நன்கு அசைவ உணவுகளை சாப்பிட்டால் தான் அந்த விடுமுறையை நன்றாக கழித்த சந்தோஷம் இருக்கும்.
நிறைய பேர் விடுமுறை நாட்களில் இதுவரை முயற்சிக்காத ஏதாவது ஒரு ரெசிபியை முயற்சிக்க நினைப்பார்கள். நீங்களும் அப்படி தானா? இதுவரை உங்கள் வீட்டில் ஆட்டுக்கால் பாயாவை செய்துள்ளீர்களா? இல்லையென்றால் இன்று செய்யுங்கள். இந்த ஆட்டுக்கால் பாயா இட்லி, இடியாப்பம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஆட்டுக்கால் பாயாலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆட்டுக்கால் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டுக்கால் - 1 செட்
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 1 கப்
* கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஆட்டுக்காலை நீரில் ஒரு முறைக்கு இரண்டு முறை மஞ்சள்
தூள் சேர்த்து நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பூண்டு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளி. பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு ஆட்டுக்காலை சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், சீரக தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, மஞ்சள்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, 2 கப்
நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் குக்கரை மூடி 1 விசில் வந்ததும், குறைவான தீயில் வைத்து 30-40
நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, விசில்
போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். (ஒருவேளை ஆட்டுக்கால் வேகாமல்
இருப்பதை உணர்ந்தால், மீண்டும் அடுப்பில் வைத்து, 10 நிமிடம் குறைவான
தீயில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.)
* இறுதியாக அதில் தேங்காய் பாலை ஊற்றி கிளறி, ஒரு கொதி வந்ததும்,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஆட்டுக்கால் பாயா தயார்.
Image Courtesy: kalaiscookingrecipes



Click it and Unblock the Notifications











